close
Choose your channels

இந்த வேகத்தை மக்களுக்கு உணவு அளிப்பதிலும் காட்டுங்கள்: அரவிந்தசாமி

Friday, June 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதையும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டம் குறித்து பல தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்ததை பார்த்தோம். இந்த பிரச்சனை காரணமாக மாணவர்களும் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கும் அவலமான சம்பவங்களும் நடந்து வருகின்றன

இந்த நிலையில் தற்போது கோலிவுட் சினிமா நட்சத்திரங்களும் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகை கஸ்தூரி, நடிகர் சித்தார்த் இதுகுறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில் தற்போது பிரபல நடிகர் அரவிந்தசாமியும் தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: 'உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள், அதிகளவு இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், நாம் இன்னும் மேஜையின் மீதுள்ள உணவுகளைப் பறிக்கும் வேலையைத்தான் செய்து வருகிறோம். இதே ஆற்றலை மக்களுக்கு உணவு அளிப்பதிலும் காட்டுங்கள். அதைத்தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன" என்று கூறியுள்ளார்.

அரவிந்தசாமியின் இந்த கருத்துக்கு சமூகவலைத்தள பயனாளிகள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.