close
Choose your channels

வெளியே போனால் அரசாங்கம் என்னை எடுத்துக்கும்: ஒரு சிறுவனின் க்யூட் வீடியோ

Tuesday, April 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடு முழுவதும் 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனை அடுத்து மேலும் 18 நாட்கள் வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலை இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஊரடங்கு காலத்தில் யாரும் வீட்டைவிட்டு தேவையில்லாமல் வெளியே போகக்கூடாது என்றும் பல்வேறு பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம்கெர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு தாய் தனது மகனிடம் வீட்டை விட்டு வெளியே போகலாமா? தயாரா? என கேட்க அந்த சிறுவன் ’வெளியே போகக் கூடாது என்றும், மோடி அங்கிள் வெளியே போகக்கூடாது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி ‘வெளியே போனால் என்னை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும்’ என்றும் குழந்தைத்தனமாக கூறியிருப்பது மிகவும் க்யூட்டாக இருப்பதாக அனுபம்கெர் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.