close
Choose your channels

மொபைல் போனால் குழந்தைக்கு கண் பார்வையைத் தவிர இத்தனை சிக்கலா? விளக்கம் அளிக்கும் வீடியோ!

Monday, January 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவா கண் பார்வை பாதிக்கப்படும் என்ற நோக்கத்தில்தான் நாம் மொபைல் போன்களை குழந்தைகளிடம் கொடுக்க வேண்டாம் எனச் சொல்கிறோம். ஆனால் இதில் கண் பார்வையைத் தவிர பல சிக்கல்கள் இருப்பதாக மருத்துவர் தெரிவிக்கின்றனர். இது குறித்து நிபுணர் சக்தி பிரியா அளிக்கும் விளக்கம் இதில் வீடியோவாக இணைக்கப்பட்டு உள்ளது.

மொபைல் போனை குறைந்தது 2 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என சக்தி பிரியா கூறுகிறார். ஒருவேளை 4 வயதுக்கு மிகையான குழந்தைகள் என்றால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு அதிக அளவாக 2 மணி நேரம் அனுமதிக்கலாம். அதற்கு மேல் அனுமதிக்கக்கூடாது என்றே சக்திப் பிரியா தெரிவிக்கிறார். காரணம் பொதுவாக குழந்தைகள் ஒரு மொழியை 5 வயதிற்கு உட்பட்டே கற்றுக் கொள்கின்றனர். இப்படிதான் ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய தாய் மொழியை முழுமையாகத் தன்னுடைய பெற்றோர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறது.

இந்நேரத்தில் ஒரு குழந்தைக்கு மொபைல் போன் கிடைத்தால் அந்தக் குழந்தை மொபைல் போனில் வரும் பல மொழிகளையும் கேட்க நேரிடலாம். இதனால் தாய்மொழியை கற்றுக் கொள்ளும் திறன் பாதிக்கப்படலாம். இதைத் தவிர்க்கும் பொருட்டு கண்டிப்பாக குழந்தைகளுக்கு மொபைல் போனை கொடுக்கக் கூடாது. ஒரு வேளை மொபைல் போனை பார்த்து பழகிவிட்ட குழந்தையாக இருந்தால் அவர்களை வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் பிசியாக வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு விளையாடுவது, குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பது என வேறு வழிகளில் அந்தக் குழந்தையின் கவனத்தை மாற்ற வேண்டும்.

ஒருவேளை பெற்றோருக்கே தெரியாமல் குழந்தை மொபைல் போனை எடுத்து பயன்படுத்திக் கொண்டிருந்தால் அதைப் பார்த்தவுடன் கண்டிப்புக் காட்டக்கூடாது என்கிறார் சக்திபிரியா. அவர்களை சமாதானப்படுத்தி ரொம்ப நேரம் ஆகிவிட்டது. நாம் வேறு வேலை செய்யலாமா? எனக் கவனத்தை திசைத்திருப்ப வேண்டும் என்கிறார். மேலும் குழந்தைகளை சுவற்றில் கிறுக்குவது அதேபோல மண்ணில் விளையாட விடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். முக்கியமாக விளையாட வைக்க வேண்டும். இவையெல்லாம் குழந்தையின் திறனை வளர்த்துக் கொள்ள உதவும் என்கிறார்.

இத்தகைய செயல்களை செய்யும்போது தானாக மொபைல் போன் மீதான ஆர்வம் குறைந்து விடும் எனகிறார். ஒருவேளை குடும்பத்தில் உள்ள பெரியவர்களே மொபைல் போனிற்கு அடிமையாக இருந்தால் அவர்கள் முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறுகிறார் சக்திபிரியா. இதனால் குழந்தை இருக்கும்போது கண்டிப்பாக மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அல்லது இணைய வசதியை துண்டித்து விட வேண்டும் எனக் கூறுகிறார்.

மொபைல் போன் என்பது கண் பார்வையை மட்டும் அல்ல, ஒரு குழந்தையின் மொழித் திறன், செயல் திறன், கவனம் எல்லாவற்றிலும் தலையீடு செய்கிறது. எனவே குழந்தையின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு மொபைல் போனை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும். குழந்தையின் செயல் திறன் என்பது விளையாட்டிலும் மற்றவர்களோடு நேரத்தை செலவழிப்பதிலும் இருக்கிறது. இந்தச் செயல்பாட்டை மொபைல் போன் தடுத்து விடுகிறது. எனவே குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றிர் சக்தி பிரியா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.