அப்பா கேரக்டரில் நடிக்கும் கமல்-ரஜினியின் காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,July 15 2015]

'கயல்' படத்தை அடுத்து பிரபுசாலமன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளனர் என்பது ஏற்கனவே அறிந்ததே. தற்போது இந்த படத்தில் கமல் மற்றும் ரஜினியுடன் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த சின்னி ஜெயந்த், முதன்முதலாக பிரபுசாலமன் இயக்கத்தில் தந்தை வேடத்தில் நடிக்கவுள்ளேன். இந்த படத்திற்காக என்னுடைய லுக்கை முற்றிலும் மாற்ற இருக்கின்றேன். இந்த படத்தில் வரும் எனது கேரக்டரின் லுக், கிட்டத்தட்ட 'பிக்கு' படத்தில் வரும் அமிதாப்பின் லுக்கை போன்று இருக்கும்' என்று கூறியுள்ளார். பிரபுசாலமனின் முந்தைய படத்தின் நாயகியான ஆனந்தியும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரயிலில் படமாக்கப்படவுள்ள இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் மிகவும் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக ஹாலிவுட்டில் பல படங்களுக்கு பணியாற்றிய ரோஜர் யுவான் சண்டைப்பயிற்சியாளராக ஒப்பந்தமாகியுள்ளார். டி.இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் வி.மகேந்திரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

More News

'பாகுபலி' கிளைமாக்ஸில் திடீர் மாற்றம்?

எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி இந்தியாவிலேயே...

'வாலு' தடை- சிம்புவுடன் பேசிய தனுஷ்

நடிகர் சிலம்பரசன் ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றமான செய்தி… அவர் நடித்த ’வாலு’ படம் ஜூலை 17 அன்று வெளியாகத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். படம்...

'அஜீத் 56' படத்தின் டைட்டில்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் முடிவடைந்து தற்போது...

'வாலு' படத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை. ஜூலை 17-ல் ரீலீஸ் ஆவதில் சிக்கல்?

சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தடை செய்ய வேண்டும் என விநியோகிஸ்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையில்...

ஆகஸ்டில் தொடங்குகிறது ரஜினி-ரஞ்சித் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மலேசியாவில் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது.....