close
Choose your channels

ஆகஸ்டில் தொடங்குகிறது ரஜினி-ரஞ்சித் படம்

Tuesday, July 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மலேசியாவில் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது.

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தொடர்ந்து ஒருமாதம் இடைவெளி இன்றி படப்பிடிப்பை நடத்தவுள்ளதாகவும், இந்த முதல்கட்ட படப்பிடிப்பிலேயே படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கபட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் மற்றும் மலேசிய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு அங்குள்ள வயதான டான் ஒருவர் செய்யும் உதவிகளும், அதனால் எதிரி டானுக்கு ஏற்படும் பிரச்சனைகளும்தான் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சிங்கப்பூர் மற்றும் மலேசிய அரசியல்வாதிகள் குறித்த கேரக்டர்களும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.