close
Choose your channels

அவதூறு வழக்கால் கிரிக்கெட் வீரர் பெற்ற மிகப்பெரிய தொகை

Monday, December 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பதிவான அவதூறு வழக்குகள் முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவில் பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ்ட் கெயில் தொடர்ந்த ஒரு அவதூறு வழக்கில் அவருக்கு $220 ஆயிரம் நஷ்ட ஈடாக கிடைத்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஊடகம் ஒன்று கிறிஸ்ட் கெயில் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரை ஒன்றை எழுதியது. இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கு ஒன்று கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அந்த ஊடகம் கிறிஸ்ட் கெயிலின் மதிப்பு, மரியாதையை குறைக்கும் வகையில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுடன் கூடிய கட்டுரை எழுதியிருப்பதாகவும், இதனால் அந்த ஊடக நிறுவனம் கிறிஸ்ட் கெயிலுக்கு $220 ஆயிரம் நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த ஊடகம் அப்பீல் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.