12 லட்ச ரூபாயுடன் வெளியேறிய சிபியை பார்த்து மனைவி கூறியது என்ன தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் 12 லட்ச ரூபாயுடன் வெளியேறிய சிபி குறித்து அவரது மனைவி தனது சமூக வலைத்தளத்தில் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் பண பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் வெளியே செல்லலாம் என்று பிக்பாஸ் வாய்ப்பைக் கொடுத்தார். இந்த பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் இருந்த நிலையில் ஒரு சிலர் தாமரை, அமீர், நிரூப், பாவனி ஆகியோர்களில் ஒருவர் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறினர்

ஆனால் தாமரை ஆரம்பம் முதலே தான் பணப் பெட்டியை எடுக்க மாட்டேன் என்று உறுதிபட கூறி விட்டார். இதனை அடுத்து அமீர், பாவனி, நிரூப் ஆகிய நால்வரில் ஒருவர் பணப்பெட்டியை எடுக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென 12 லட்சம் ரூபாய் பணப் பெட்டியின் மதிப்பு வந்தவுடன் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு சிபி வெளியேறினார். சிபியின் இந்த முடிவு பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிபியின் இந்த முடிவு குறித்து அவரது மனைவி ஸ்லோகா தனது சமூக வலைத்தளத்தில், ‘வழக்கமாக நான் உன்னை பாராட்ட மாட்டேன், ஆனால் இப்போது உன்னுடைய முடிவை நினைத்து நான் சந்தோஷம் அடைகிறேன். உன்னை நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது. நீ தலைநிமிர்ந்து வெளியே வந்து இருக்கிறாய். திருமணமான பேச்சிலரே, வீட்டுக்கு வந்து எனக்கு டீ, ஆம்லெட் போட்டு கொடு’ என்று பதிவு செய்துள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

விவாகரத்தான கணவர் மீது திடுக்கிடும் புகார் அளித்த இசைவாணி!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான இசைவாணி தனது விவாகரத்தான முன்னாள் கணவர் மீது மோசடி புகார் ஒன்றை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.

ரகசியத் திருமணம் செய்து கொண்டேனா? கொந்தளித்த முன்னணி நடிகை!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப்பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலரை

இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம்… விளாசும் முன்னாள் வீரர்கள்!

ஜோகனஸ்பர்க்கில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் படு சொதப்பலாக விளையாடி 7 விக்கெட்

பிக்பாஸ் கூறியதால் பிரியங்காவை வீட்டை விட்டு விரட்டும் ராஜூ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 95வது நாளான நேற்று சிபி 12 லட்சம் ரூபாய் பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று ஒருவரை நேரடியாக இறுதிப் போட்டிக்கு அழைத்துச்

நொறுங்கிபோன இந்தியக் கோட்டை… அடுத்த போட்டியில் கோலி விளையாடுவாரா?

இந்தியக் கிரிக்கெட் அணி இதுவரை ஜோகனஸ்பர்க்கில் தோல்வியைத் தழுவியதே இல்லை