close
Choose your channels

12 லட்ச ரூபாயுடன் வெளியேறிய சிபியை பார்த்து மனைவி கூறியது என்ன தெரியுமா?

Friday, January 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் 12 லட்ச ரூபாயுடன் வெளியேறிய சிபி குறித்து அவரது மனைவி தனது சமூக வலைத்தளத்தில் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் பண பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் வெளியே செல்லலாம் என்று பிக்பாஸ் வாய்ப்பைக் கொடுத்தார். இந்த பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் இருந்த நிலையில் ஒரு சிலர் தாமரை, அமீர், நிரூப், பாவனி ஆகியோர்களில் ஒருவர் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறினர்

ஆனால் தாமரை ஆரம்பம் முதலே தான் பணப் பெட்டியை எடுக்க மாட்டேன் என்று உறுதிபட கூறி விட்டார். இதனை அடுத்து அமீர், பாவனி, நிரூப் ஆகிய நால்வரில் ஒருவர் பணப்பெட்டியை எடுக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென 12 லட்சம் ரூபாய் பணப் பெட்டியின் மதிப்பு வந்தவுடன் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு சிபி வெளியேறினார். சிபியின் இந்த முடிவு பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிபியின் இந்த முடிவு குறித்து அவரது மனைவி ஸ்லோகா தனது சமூக வலைத்தளத்தில், ‘வழக்கமாக நான் உன்னை பாராட்ட மாட்டேன், ஆனால் இப்போது உன்னுடைய முடிவை நினைத்து நான் சந்தோஷம் அடைகிறேன். உன்னை நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது. நீ தலைநிமிர்ந்து வெளியே வந்து இருக்கிறாய். திருமணமான பேச்சிலரே, வீட்டுக்கு வந்து எனக்கு டீ, ஆம்லெட் போட்டு கொடு’ என்று பதிவு செய்துள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.