எங்க அறைஞ்சு தான் பாரேன்: என்ன ஒரு கெத்து! ஓவியாடா....

  • IndiaGlitz, [Saturday,July 22 2017]

பிக்பாஸ் ஆரம்பித்த நாளில் இருந்து நேற்றுதான் பரபரப்பான காட்சிகள் இடம்பெற்றது. சூழ்ச்சியின் மொத்த உருவமாக ஜூலி, காயத்ரி, நமீதா ஆகியோர்களும், அவர்களுக்கு ஒத்து ஊதும் சக்தி, சினேகன் ஆகியோர்களும் இருக்க, தைரியத்தின் மொத்த உருவமாக ஓவியா காணப்பட்டார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் ஒளிபரப்பான புரமோ வீடியோவில், இப்படியே பேசிக்கிட்டு இருந்தா ஓங்கி அறைஞ்சிருவேன் என்று ஓவியாவை பார்த்து சக்தி கூற, 'அறைங்க பார்க்கலாம், எங்கே அறைங்க' என்று ஓவியா முன்னெடுத்த வந்த காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற ஓவியாவுக்கு இருக்கும் இந்த துணிச்சல் ஒன்றே போதும் என்று தோன்றுகிறது.

எல்லோரும் சேர்ந்து டார்ச்சர் கொடுத்தால் பரணியை பைத்தியமாக்கி வெளியேற்றியது போல் ஓவியாவையும் வெளியேற்றிவிடலாம் என்ற சதித்திட்டம் பலிக்கவில்லை. எனவே ஓவியாவுக்கு எதிரான பங்கேற்பாளர்கள் படு அப்செட்டில் இருப்பதாக நிகழ்ச்சியின் போக்கில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

More News

ரஜினி, அஜித்துடன் ஓப்பிடப்படும் ஓவியா! நெட்டிசன்களின் கலக்கல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரே ஹீரோ ஓவியா தான் என்று நேயர்களால் பார்க்கப்பட, அவருக்கு குவிந்து வரும் அமோக ஆதரவால் நிச்சயம் அவர் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

லைகாவின் அடுத்த படத்தில் நயன்தாரா: முழுவிபரம் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' என்ற படத்தை சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வரும் நிறுவனம் லைகா புரடொக்ஷன்ஸ். இதே நிறுவனம் கமல்ஹாசனின் 'மருதநாயகம்' படத்தையும் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ஓவியாவின் பொறுமையை சோதித்த ஜூலி: முதன்முதலாக ஆத்திரப்பட்ட ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளில் இருந்து புன்சிரிப்புடன் கள்ளங்கபடம் இல்லாமல் இருக்கும் ஒரே பங்கேற்பாளர் ஓவியா தான் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது...

தளபதியின் 'மெர்சல்' இசை வெளியீட்டு தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இன்றைய ஆடிவெள்ளி விசேஷமாக இந்த படம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்ததை காலைய&#

கமல்ஹாசனை அடுத்து ஊழலை வெளிப்படுத்திய துணிச்சலான இயக்குனர்

உலகநாயகன் கமல்ஹாசன், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கின்றது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆணித்தரமாக கூறினார்..