close
Choose your channels

எங்க அறைஞ்சு தான் பாரேன்: என்ன ஒரு கெத்து! ஓவியாடா....

Saturday, July 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் ஆரம்பித்த நாளில் இருந்து நேற்றுதான் பரபரப்பான காட்சிகள் இடம்பெற்றது. சூழ்ச்சியின் மொத்த உருவமாக ஜூலி, காயத்ரி, நமீதா ஆகியோர்களும், அவர்களுக்கு ஒத்து ஊதும் சக்தி, சினேகன் ஆகியோர்களும் இருக்க, தைரியத்தின் மொத்த உருவமாக ஓவியா காணப்பட்டார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் ஒளிபரப்பான புரமோ வீடியோவில், இப்படியே பேசிக்கிட்டு இருந்தா ஓங்கி அறைஞ்சிருவேன் என்று ஓவியாவை பார்த்து சக்தி கூற, 'அறைங்க பார்க்கலாம், எங்கே அறைங்க' என்று ஓவியா முன்னெடுத்த வந்த காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற ஓவியாவுக்கு இருக்கும் இந்த துணிச்சல் ஒன்றே போதும் என்று தோன்றுகிறது.

எல்லோரும் சேர்ந்து டார்ச்சர் கொடுத்தால் பரணியை பைத்தியமாக்கி வெளியேற்றியது போல் ஓவியாவையும் வெளியேற்றிவிடலாம் என்ற சதித்திட்டம் பலிக்கவில்லை. எனவே ஓவியாவுக்கு எதிரான பங்கேற்பாளர்கள் படு அப்செட்டில் இருப்பதாக நிகழ்ச்சியின் போக்கில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.