இச்சை ஆசைகள், குவியும் ஆபாச பேச்சுக்கள்....! கிளப்ஹவுசுக்கு என்னதான் ஆச்சு....!

  • IndiaGlitz, [Tuesday,July 13 2021]

கிளப் ஹவுஸ் என்ற செயலியை பலரும் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக் என்ற சமூகவலைத்தளங்களுக்கு மத்தியில், புதிதாக வந்துள்ள கிளப்ஹவுஸ் என்ற அப்ளிகேஷன் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த செயலியானது, இணையத்தில் புதிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம்.

கிளப் ஹவுசில் நடக்கும் ஆடியோ விவாதங்கள், ஒரு பக்கம் சமூகத்தின் மாற்றமாக இருந்தாலும், பலரும் அதை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு பக்கம் சமூக கருத்துக்கள், பெண் விடுதலை, நீட் தேர்வு பிரச்சனை, அரசியல் விவாதங்கள், சினிமா பொழுதுபோக்கு என மக்கள் நல்ல கருத்துக்களை விவாதித்து வருகிறார்கள்.

மற்றொரு பக்கம் ஆபாசத்தின் உச்சமாகவே விளங்குகிறது இந்த கிளப்ஹவுஸ். இங்கு விவாதிக்கப்படும் இடங்களை ரூம்கள் என்று அழைப்பார்கள், அந்த வகையில் கிளப்ஹவுசில் ஏராளமான ஆபாச ரூம்கள் உள்ளது என சொல்லலாம். ஹரஹராமகாதேவி போன்ற பெயர்களை வைத்துக்கொண்டு இரவு 8 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை பல சபல இளைஞர்கள் செய்யும் சேட்டைகள் ஆபாசத்தின் உச்சமாகவே உள்ளது. குறிப்பாக அறிமுகம் இல்லாத பெண்களும், ஆண்களும் தங்களுடைய பாலியல் ஆசைகள், விருப்பு வெறுப்புகள் குறித்து இதில் விவாதிக்கும் கொடுமையும் நடந்து வருகிறது. இரட்டை அர்த்தங்களில் பேசுவது, எந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என விவாதிப்பது, யாருடைய துணைகளை மாற்றிக்கொள்ளவிருப்பம், ஒரு அறையில் எத்தனை பேருடன் உடலுறவு வைத்துக்கொள்ள விருப்பம் என பல கேவலமான கேள்விகள் முகம் தெரியாத நபர்களுடன் விவாதிக்கப்படுகிறது.

முக்கியமாக பெண்களும் இதில் கலந்துகொண்டு சகஜமாக பேசுவதே, கொடூரத்தின் உச்சமாக இருந்து வருகிறது. பெண்களை குறித்து கமெண்ட் பதிவிடுவதை, அவர்களே ரசிப்பது அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் ஓரிரண்டு குழுக்களே இந்த கேவலமான கேவலமான செயல்களை செய்து வந்த நிலையில், தற்போது இக்குழுக்கள் அதிகமாகிவிட்டது. சமூகத்தை முன்னெடுக்கும் நோக்கில் பலர் பாடுபட்ட வர, காமுகர்களின் இந்த மாதிரியான செயல்கள் பொதுமக்களை முகம் சுழிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த மாதிரி தங்கள் இச்சைகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருபவர்கள், சமூகத்தின் சாபக்கேடே.

 

More News

தனுஷ் படத்தில் நடிக்கும் மூன்று பிரபல ஹீரோயின்கள் இவர்கள் தானா?

தனுஷ் நடிக்கவிருக்கும் 'D44' என்ற திரைப்படத்தில் மூன்று பிரபல ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம் இந்த நிலையில் தற்போது அவர்கள் யார் யார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 

தனுஷின் 'நானே வருவேன்' படத்தின் புதிய டைட்டில் இதுதானா? 

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் 'நானே வருவேன்' என்று உறுதி செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ஆண் நண்பருடன் நீச்சல்குளத்தில் பந்து விளையாடும் விஜய் டிவி சீரியல் நடிகை!

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனது ஆண் நண்பருடன் நீச்சல்குளத்தில் பந்து விளையாடும் வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஒரு வயது குட்டிப்பாப்பாவாக நயன்தாரா: வைரல் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒரு வயது குட்டிப் பாப்பாவாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

சசிகுமாரின் அடுத்த படம்: இயக்குனர், இசையமைப்பாளர் அறிவிப்பு!

கடந்த 2008ஆம் ஆண்டில் 'சுப்பிரமணியபுரம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என அறிமுகமானவர் சசிகுமார். அதன்பின்னர் 'நாடோடிகள்' 'போராளி' 'சுந்தரபாண்டியன்' 'நிமிர்ந்து நில்'