தமிழகத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்!!!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள ஹோல்டியா நிறுவனத்தின் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியின் போது உரையாற்றிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான நடவடிக்கையால் ஒசூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து வலிமை அடைந்து வருகின்றன. ஒசூர் பகுதியில் 2,000 க்கும் அதிகமான சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் முதன்மை தொழில் நகரமாக விளங்கி வருகிறது. ஒசூர் மற்றும் குருபரப்பள்ளி, சூளகிரியில் மேலும் ஒரு சிப்காட் நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. இதனால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினார்.

மேலும் செய்தியாளர்களிடம் சந்திப்பின்போது பேசிய அமைச்சர் சம்பத், கொரோனா காரணமாக சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களின் மூலம் தமிழகத்தில் முதலீடுகளை செய்ய தமிழக அரசு பல்வேறு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. டெல், நோக்கியா, மற்றும் ஆட்டோ மொபைல், கனரக வாகன உற்பத்தி நிறுவனங்கள் எனப் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன. இதன்மூலம் தொழில் வளர்ச்சியில் உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரூ.3 லட்சம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 304 தொழில் நிறுவனங்கள் 24% உற்பத்தி செய்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் 82% தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா சமயத்தில் மட்டும் 55 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதுவரையில் ரூ.40,304 கோடி முதலீடுகளின் மூலம் 74 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா காலத்திலும் முதலீடுகள் அதிகம் ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் முதலீடுகளை அனுமதித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனால் கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்பை பெறுவதற்கு தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்து வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருவதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

More News

கேப்டன்ஷிப் டாஸ்க்: பாலாஜிக்கு ஒரு ஸ்பெஷல் குறும்படம்

நேற்று நடைபெற்ற கேப்டன்ஷிப் டாஸ்க்கில் பாலாஜி, ரமேஷ் மற்றும் ரம்யா கலந்து கொண்ட நிலையில் இந்த டாஸ்க்கின் முடிவில் பாலாஜிக்கு ஏற்பட்ட அதிருப்தியை கேப்டன்

வீட்டுக்கு போகணுமா? வின் பண்ணனுமா? அர்ச்சனாவுக்கு வேற லெவல் கேள்வி கேட்ட ஆஜித்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமைதியாக இருக்கும் போட்டியாளர் என்று ஆஜித்தை பலர் விமர்சனம் செய்தாலும் பேச வேண்டிய நேரத்தில் மிகச்சரியாக, சரியான அளவுடன் சொல்ல வேண்டிய

ரஜினிக்கு அரசியலை விட இதுதான் ரொம்ப முக்கியம்: கமல்ஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் என்றும், அந்த சந்திப்பின்போது அரசியலுக்கு வருவது குறித்து

என்னோட கான்செப்ட் இதுதான்: கால்சென்டர் டாஸ்க் குறித்து பாலாஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய கால்சென்டர் டாஸ்கில் ஆரி மற்றும் பாலாஜி போன் மூலம் உரையாடும் முதல் புரமோவை ஏற்கனவே பார்த்தோம். பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு

பலமுறை கேலி செய்த அர்ச்சனாவை ஒரே மீம்ஸில் பங்கம் செய்த சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா நுழைந்த முதல் நாளில் ஒவ்வொருவரைப் பற்றி கருத்துக் கூறிய போது சுரேஷை மட்டும் அவர் படுத்திருந்த விதம் குறித்து கேலி செய்து சிரித்தார்