சொந்த அண்ணனையே ஒதுக்கியவர் மு.க.ஸ்டாலின்… திருச்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் காட்டம்!


வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று தேசியக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதை அடுத்து தொடர்ந்து தற்போது திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது திருச்சியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பாம்பு மற்றும் பல்லி போன்ற விஷம் கொண்டவர் என விமர்சிக்கிறார். உண்மையில் நான் மனிதன். அரசியல் வாழ்க்கைக்கு அண்ணனே (மு.க.அழகிரி) போட்டியாக வருவார் என நினைத்த மு.க.ஸ்டாலின் அவருடன் இதுவரை சமரசம் செய்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.

இத்தகைய குணங்களைக் கொண்ட மு.க.ஸ்டாலினா தமிழக மக்களுக்காக உழைக்கப் போகிறார். அவருடைய செயல்கள் அனைத்தும் கடும் விமர்சனத்தைக் கொண்டதாகவே இருக்கிறது என கடும் ஆவேசத்துடன் மக்கள் முன்னிலையில் பேசியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே திமுக, அதிமுக என இரு கட்சிகளும் தொடர்ந்து விமர்சனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மு.க.ஸ்டாலின் தனது அண்ணனுடன் சமரசம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என தமிழக முதல்வர் விமர்சித்து இருப்பதும் பொதுமக்களிடம் கவனம் பெற்று இருக்கிறது.

More News

'குக் வித் கோமாளி' நடுவர் செஃப் தாமுவின் மகளா இவர்? வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'களும் சரி,

லிப் சர்வீஸ் தான்..இவ்வளவு நாள் செஞ்சிங்காளா...! கமலை பார்த்து வானதி நறுக் கேள்வி...!

கமல்ஹாசனை பார்த்து, இத்தனை நாட்கள் உதட்டுக்கு மட்டுமே சேவை செஞ்ச நீங்க, என்னை பார்த்து துக்கடா அரசியல் வாதி என்று சொல்லலாமா..? என்று கேள்விக்கனைகளை தொடுத்துள்ளார் வானதி சீனிவாசன். 

ஒரே ஒரு வாக்குறுதி, இஸ்லாமிய பெண்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளும் குஷ்பு!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்பு இஸ்லாமிய பெண்களை ஒரே ஒரு வாக்குறுதி மூலம் கவர்ந்து விட்டதாகவும் அதனால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின்

சாதிப்பழமொழி சொல்லி சர்ச்சை பேச்சு...! திமுக வீரமணிக்கு  தொடரும் கண்டனங்கள்...!

பிரச்சார கூட்டத்தில் வழக்கில் இல்லாத சாதிப்பழமொழியை கூறிய தி.க.தலைவர் கி.வீரமணிக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இன்று முதல் 5 நாட்களுக்கு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்: வானிலை மையம் அறிவுறுத்தல்!

இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது