நடிகை அபர்ணாவிடம் தவறாக நடக்க முயன்றாரா கல்லூரி மாணவர்? அதிர்ச்சி வீடியோ

  • IndiaGlitz, [Thursday,January 19 2023]

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் கல்லூரி மாணவர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா நடித்த ’சூரரை போற்று’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அபிராமி பாலமுரளி. இவர் மலையாளத்தில் ’தங்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் எர்ணாகுளத்தில் உள்ள சட்ட கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விழாவில் அந்த கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் அபர்ணா பால முரளி உள்பட படக்குழுவினர்களை வரவேற்று பூங்கோத்து வழங்கினார். அதை மகிழ்ச்சியுடன் அபர்ணா வாங்கிய போது, அந்த மாணவர் அபர்ணாவுக்கு கைகுலுக்கியதோடு அவரது தோளில் கை போட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபர்ணா அவரிடம் இருந்து விலகி தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.

இதனை அடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த மாணவர் இது குறித்து விளக்கம் அளித்தார். தான் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை என்றும் அபர்ணாவின் தீவிர ரசிகன் என்றும் உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு செய்ததாகவும் விளக்கம் அளித்தார். அதன் பிறகு மீண்டும் அவர் அபர்ணாவிடம் கை கொடுக்க வந்த போது அபர்ணா கையை கொடுக்க மறுத்து அவரை தவிர்த்தார்.

இதனை அடுத்து பொது மேடையில் மன்னிப்பு கேட்ட அந்த கல்லூரி மாணவர் மேடையை விட்டு கீழே இறங்கினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு நடிகை மஞ்சிமா மோகன் உள்பட பல தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

More News

இது 'துணிவு' படத்துடன் ஒப்பிடும் பதிவல்ல', போட்றா பிஜிஎம் ஆ' : 'வாரிசு' பிரபலம் டுவிட்

இது 'துணிவு' படத்துடன் ஒப்பிடும் பதிவல்ல என்றும் அந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று 'வாரிசு' படத்தின் பிரபலம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

நிக்காம முன்னேறு.. கண்ணோரம் ஏன் கண்ணீரு... ஷிவினுக்கு பிக்பாஸ் நெகிழ்ச்சியான பாடல்!

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் ஐந்து போட்டியாளர்களையும் பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு போட்டியாளருக்கும் மலரும் நினைவுகளை பிக்பாஸ் ஏற்ப்படுத்தி தருகிறார்

இன்னும் பெரிய விஷயமெல்லாம் இருக்கு, அப்புறமா சொல்றேன்.. பணமூட்டையுடன் வெளியேறிய கதிரவனின் முதல் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை தாண்டி தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும்.

டைட்டில் வெல்வார் என எதிர்பார்த்தோமே... பணப்பெட்டியுடன் கிளம்பியது இந்த போட்டியாளரா?

பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்த சீசனில் பணமூட்டை மற்றும் பணப்பெட்டி ஆகிய இரண்டும் அறிமுகம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டைட்டில் வெல்வார்

பிக்பாஸ் சனம்ஷெட்டி கூறிய திடுக்கிடும் புகார்.. விளக்கம் அளித்த உயரதிகாரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை சனம் ஷெட்டி கூறிய திடுக்கிடும் புகாருக்கு விமான நிலைய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.