close
Choose your channels

நடிகை அபர்ணாவிடம் தவறாக நடக்க முயன்றாரா கல்லூரி மாணவர்? அதிர்ச்சி வீடியோ

Thursday, January 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் கல்லூரி மாணவர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா நடித்த ’சூரரை போற்று’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அபிராமி பாலமுரளி. இவர் மலையாளத்தில் ’தங்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் எர்ணாகுளத்தில் உள்ள சட்ட கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விழாவில் அந்த கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் அபர்ணா பால முரளி உள்பட படக்குழுவினர்களை வரவேற்று பூங்கோத்து வழங்கினார். அதை மகிழ்ச்சியுடன் அபர்ணா வாங்கிய போது, அந்த மாணவர் அபர்ணாவுக்கு கைகுலுக்கியதோடு அவரது தோளில் கை போட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபர்ணா அவரிடம் இருந்து விலகி தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.

இதனை அடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த மாணவர் இது குறித்து விளக்கம் அளித்தார். தான் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை என்றும் அபர்ணாவின் தீவிர ரசிகன் என்றும் உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு செய்ததாகவும் விளக்கம் அளித்தார். அதன் பிறகு மீண்டும் அவர் அபர்ணாவிடம் கை கொடுக்க வந்த போது அபர்ணா கையை கொடுக்க மறுத்து அவரை தவிர்த்தார்.

இதனை அடுத்து பொது மேடையில் மன்னிப்பு கேட்ட அந்த கல்லூரி மாணவர் மேடையை விட்டு கீழே இறங்கினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு நடிகை மஞ்சிமா மோகன் உள்பட பல தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.