பொதுவெளியில் சாக விரும்பிய நபர்… மனதை உருக்கும் சம்பவம்!

  • IndiaGlitz, [Monday,January 10 2022]

கொலம்பியா நாட்டில் கருணைகொலை செய்துகொள்ள விரும்பிய நபர் ஒருவர் பொதுவெளியில் மக்களுக்கு முன்பாகச் சாக விரும்பியிருக்கிறார். இந்தச் சம்பவம் நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் மீதான பார்வையை மாற்றியிருக்கிறது.

தீராத நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் அல்லது வருடக்கணக்கில் வலியால் துடித்துவருவோர் எனப் பலரும் சட்டப்பூர்வமாகத் தற்கொலை செய்து கொள்ள விரும்புகின்றனர். இந்த வகையான கருணைக் கொலையை ஒருசில நாடுகள் மட்டுமே அனுமதித்து இருக்கின்றன. இந்தியாவில் கருணைக்கொலை இன்றைக்கு வரைக்கும் சட்டப்பூர்வமாக மாற்றப்படவில்லை. ஆனால் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து கருணைக்கொலை செய்துகொள்ளலாம்.

இந்நிலையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு 60 வயதான விக்டர் எஸ்கோடார் என்பவர் கடந்த 2 வருடங்களாக தீராத வலியை அனுபவித்து வருகிறார். அவர் கடந்த அக்டோபரில் இம்பனாகோ எனும் மருத்துவமனை மூலமாக கருணைக்கொலைக்கு விண்ணப்பித்தார். ஆனால் மருத்துவர்கள் இன்னும் அவருடைய வலியை குணப்படுத்த வழிமுறைகள் இருப்பதாகக் கூறி அவருடைய கோரிக்கையை நிராகரித்தனர். இதனால் மனமுடைந்த எஸ்கோடர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தற்போது வெற்றிப்பெற்றுள்ளார்.

இதையடுத்து நோய்வாய்ப்பட்டு அவதிப்படும் பல ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை மாஸ்கோடர் பொதுவெளியில் வைத்து சாக விரும்பியிருக்கிறார். அவருடைய ஆசையை நிறைவேற்ற மருத்துவர்கள் நேரலை ஒளிப்பரப்போடு எல்கோடருக்கு மயக்கஊசி போட்டு கருணைகொலை செய்துள்ளனர். மேலும் இதைத்தான் விரும்புகிறேன் என்று எல்கோடர் சொன்ன வாக்கியம் தற்போது கொலம்பியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொலம்பியாவில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் கருணைக்கொலை தடைசெய்யப்பட்டது. இந்தச் சட்டம் ஜுலை 2021 முதல் அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சட்டப்பூர்வமான விஷயங்கள் குறித்து மிகவும் கவலைப்படும் மருத்துவர்கள் அதிகாரிகள் கருணைக்கொலையை விரைந்து அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவே எல்கோடர் இப்படி பொதுவெளியில் கருணைகொலை செய்துகொண்டுள்ளார்.

More News

பிரபல நடிகைக்கு ஒமைக்ரான் தொற்று… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் எனப்பல முன்னணி நடிகர்களுடன்

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கின் மாஸ் அப்டேட்!

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய இந்தப் படம்  ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது

அருண்விஜய்யின் 'யானை' படத்தின் பொங்கல் விருந்து: ரசிகர்கள் உற்சாகம்!

அருண் விஜய் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'யானை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள்

இது எந்த வகையில் நியாயம்? சென்னை பிரச்சனையை கையில் எடுத்த நடிகை ரோஜா!

இது எந்த வகையில் நியாயம் என சென்னை பிரச்சனையை நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜா கையில் எடுத்துள்ளார். 

கப்பு முக்கியம் பிகிலே..... ராஜூவை வெளியில் இருந்து வாழ்த்தும் பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு தற்போது நான்கு போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.