close
Choose your channels

இது எந்த வகையில் நியாயம்? சென்னை பிரச்சனையை கையில் எடுத்த நடிகை ரோஜா!

Sunday, January 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இது எந்த வகையில் நியாயம் என சென்னை பிரச்சனையை நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜா கையில் எடுத்துள்ளார்.

கடந்த 80 களில் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை ரோஜா கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் அவர் நகரி தொகுதி எம்எல்ஏவாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை செய்துவரும் ரோஜா தற்போது சென்னை - திருப்பதி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை தரமற்று இருப்பதை இரு மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக சென்னை - திருப்பதி சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது என்றும் இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும் ஆனால் சாலையை புதுப்பிக்காமல் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களிடம் சுங்க வசூல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்றும் இது எந்த வகையில் நியாயம்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

சாலையை புதுப்பித்த பின்னர்தான் வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிக்க வேண்டுமென்ற ரோஜாவின் புகார் தற்போது சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையினர்களிடம் வந்துள்ளதை அடுத்து விரைவில் இந்த சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.