எந்த சாமியும் செய்யாததை எடப்பாடி பழனிசாமி செய்தார்: காமெடி நடிகர்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கொரோனா வைரஸ் காரணமாக கலைவாணர் அரங்கில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே. முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய உடன் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்றைய கூட்டத்தில் நீட் தேர்வு குறித்த காரசாரமான விவாதம் நடந்தது.

குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் இடையே நீட் தேர்வு குறித்து நடைபெற்ற விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மூன்றாம் நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்றைய கூட்டத்தில் திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் காமெடி நடிகருமான கருணாஸ் பேசியபோது ’கொரோனா காலத்தில் மாணவர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேற்கொண்ட பணிகள் பாராட்டத்தக்கது. மேலும் ’அரியர் மாணவர்களின் அரசன்’ என்றும் முதல்வர் பழனிசாமி புகழப்படுகிறார்.

குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களை அனைவரையும் தேர்ச்சி பெற வைத்து இதுவரை எந்த சாமியும் செய்யாததை எடப்பாடி பழனிச்சாமி செய்துள்ளார் என்று கருணாஸ் கூறினார்.

More News

இலவச விளம்பரம் ஆரம்பிச்சுட்டீங்க போல: சூர்யா பட பாடல் பிரச்சனை குறித்து விஜய் பட இயக்குனர்!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் குறித்த வழக்கு ஒன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது

தமிழக அமைச்சரை நேரில் சந்தித்த கே.பாக்யராஜ்: என்ன காரணம்?

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் சங்கரதாஸ் சுவாமி அணியின் சார்பில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜ்

ஆன்லைன் வகுப்பு கொடுமை… பாடம் புரியாததால் 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!!

சிவகங்கை அருகே ஆன்லைனில் நடத்தும் பாடம் புரியாமல் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு… தமிழக அரசு அதிரடி!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாகத் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரம் போதை மாத்திரைகள்… பரபரப்பு சம்பவம்!!!

சென்னை விமான நிலையத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.