விவேக்கை நெகிழ்ச்சி அடைய செய்த ஏழை வாலிபர்

  • IndiaGlitz, [Saturday,November 12 2016]

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது மகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார். உடற்பயிற்சியை முடித்த பின்னர் விவேக்கும் அவருடைய மகளும் காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் விவேக் மகள் தனது மொபைலை காரின் பின்பகுதியில் வைத்திருந்தாராம். அந்த மொபைல் கார் ஓடும்போது தவறி கிழே விழுந்துள்ளது. அதை கவனிக்காத இருவரும் வீட்டிற்கு சென்றவுடன் மொபைலை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் அந்த மொபைல் நம்பருக்கு போன் செய்ய, அதை பாஸ்கர் என்ற வாலிபர் எடுத்து வைத்திருந்ததாகவும், தான் இருக்கும் இடத்தை கூறி அங்கு வந்தால் மொபைலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
விவேக் அந்த வாலிபர் சொன்ன இடத்திற்கு சென்று மொபைலை வாங்கிவிட்டு சன்மானமாக பணம் கொடுத்துள்ளார். ஆனால் சன்மானத்தை அந்த தன்மானமுள்ள இளைஞர் வாங்க மறுத்துவிட்டதாகவும், இதன் காரணமாக விவேக் நெகிழ்ச்சி அடைந்ததாகவும் செய்தி வந்துள்ளது. இதுகுறித்து விவேக் தனது சமூக வலைத்தளத்தில் 'தெருவில் காணும் இளைஞர்கள் சமூக குற்றம்,பாலியல் குற்றம், ஒரு தலைக்காதல் என்று இருக்க, இப்படி நேர்மையானவர்களும் உள்ளனர்' என்று கூறியுள்ளார்.

More News

சூர்யாவின் 'சிங்கம் 3' படத்தின் பிரிட்டன் வியாபாரம் குறித்த தகவல்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம் 3' என்ற 'எஸ் 3' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகக்குறுகிய காலத்தில் 5 மில்லியன்...

கார்த்தியின் 'காற்று வெளியிடை' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

கார்த்தி நடித்த 'காஷ்மோரா' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.

அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு கிடைத்த இனிப்பான செய்தி

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் நேற்று வெளியாகி சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களளயும் கவர்ந்துள்ளது

'அச்சம் என்பது மடமையடா' முதல் நாள் வசூலில் சாதனை

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த பட ரிலீஸ் தேதி

கோலிவுட் திரையுலகில் பழம்பெரும் நிறுவனமான ஏவிஎம் திரைப்பட நிறுவனம் ஒரு படத்திற்கு பூஜை போட்ட அன்றே ரிலீஸ் தேதியையும் அறிவித்து அதன்படி சரியாக திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வார்கள்.