close
Choose your channels

விவேக்கை நெகிழ்ச்சி அடைய செய்த ஏழை வாலிபர்

Saturday, November 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது மகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார். உடற்பயிற்சியை முடித்த பின்னர் விவேக்கும் அவருடைய மகளும் காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் விவேக் மகள் தனது மொபைலை காரின் பின்பகுதியில் வைத்திருந்தாராம். அந்த மொபைல் கார் ஓடும்போது தவறி கிழே விழுந்துள்ளது. அதை கவனிக்காத இருவரும் வீட்டிற்கு சென்றவுடன் மொபைலை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் அந்த மொபைல் நம்பருக்கு போன் செய்ய, அதை பாஸ்கர் என்ற வாலிபர் எடுத்து வைத்திருந்ததாகவும், தான் இருக்கும் இடத்தை கூறி அங்கு வந்தால் மொபைலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
விவேக் அந்த வாலிபர் சொன்ன இடத்திற்கு சென்று மொபைலை வாங்கிவிட்டு சன்மானமாக பணம் கொடுத்துள்ளார். ஆனால் சன்மானத்தை அந்த தன்மானமுள்ள இளைஞர் வாங்க மறுத்துவிட்டதாகவும், இதன் காரணமாக விவேக் நெகிழ்ச்சி அடைந்ததாகவும் செய்தி வந்துள்ளது. இதுகுறித்து விவேக் தனது சமூக வலைத்தளத்தில் 'தெருவில் காணும் இளைஞர்கள் சமூக குற்றம்,பாலியல் குற்றம், ஒரு தலைக்காதல் என்று இருக்க, இப்படி நேர்மையானவர்களும் உள்ளனர்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.