close
Choose your channels

முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு....! ராசா உருவபொம்மை செருப்பால் அடித்து ஆர்ப்பாட்டம்..!

Monday, March 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல்வர் பழனிச்சாமி குறித்து ஆ.ராசா சர்ச்சையாக பேசியதால், எடப்பாடியில் அவரின் உருவபொம்மையை செருப்பால் அடித்து, எரித்து அதிமுக-வினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பு குறித்து, திமுக-வின் ஆ. ராசா சர்ச்சையாக பேசியதால், மாநிலம் முழுவதும் இவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. முக்கியமாக சேலம் மாவட்டத்தில் ராசாவின் உருவ பொம்மையை உருவாக்கி, அதை செருப்பால் அடித்து, எரித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள் அதிமுக மற்றும் பாஜக-வினர்.

சேலம், எடப்பாடி ரயில் நிலையம் அருகே, அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் சார்பாக ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதே போல் சேலத்தில், அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதிலும் ராசாவின் உருவபொம்மையை செருப்பு, விளக்குமாற்றால் அடித்தும், எரித்தும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தனர் அதிமுக-வினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.