ஷிவாங்கியை திட்டிய அஜித் ரசிகர்கள்: சமாதானப்படுத்தும் நெட்டிசன்கள்!

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

சமீபத்தில் நிறைவு பெற்ற குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வேற லெவலில் பிரபலம் அடைந்தார்கள் என்பது தெரிந்தது. குறிப்பாக கோமாளிகளில் ஒருவரான ஷிவாங்கியை அந்த செட்டில் இருந்தவர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் தங்கள் வீட்டு பெண்ணாகவே நினைத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த சிவகார்த்திகேயன் கூட ஷிவாங்கி போல் தனக்கு ஒரு தங்கை இல்லையே என்று தான் வருத்தப்படுவதாக தெரிவித்திருந்தது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அந்த அளவுக்கு அனைவர் மனதிலும் இடம் பிடித்த ஷிவாங்கியை கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் மட்டும் திடீரென திட்டி வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஸ்வின் மற்றும் ஷிவாங்கி தளபதி விஜய் நடிப்பில் வெளியான கடைசி படம் எது? என்ற கேள்விக்கு ’மாஸ்டர்’ என்று சரியாக பதில் கூறினார். ஆனால் அஜித் நடிப்பில் வெளியான கடைசி படம் என்று கேள்விக்கு மட்டும் அவர் ‘வேதாளம்’ ’விவேகம்’ என்று அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி தற்போது அஜித் நடித்து வரும் படத்தின் பெயரை கூட அவர் சொல்லவில்லை. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் கடுப்பாகி ஷிவாங்கியை திட்டி வருகின்றனர். ஆனால் ஷிவாங்கி வெகுளித்தனமான கூறிய பதிலை வைத்து அவர் அஜித்துக்கு எதிரானவர் என்ற ரீதியில் அவரை திட்ட வேண்டாம் என நெட்டிசன்கள் அஜித் ரசிகர்களை சமாதானம் செய்து வருகின்றனர்.

More News

மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் பணிபுரியும் 'அவதார்' குழுவினர்!

மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் 'அவதார்' குழுவினர் பணிபுரிய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

பெண் பிள்ளைகளை வளர்ப்பதை விட இதுதான் கஷ்டம்: 'குக் வித் கோமாளி' கனி வெளியிட்ட வீடியோ!

சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனி என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இன்னும் மூன்று மாதங்களில் குக் வித் கோமாளி சீசன் 3

நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த 'சின்னத்தம்பி' சீரியல் நடிகை!

பெரியதிரை நடிகைகள் போல் சர்வசாதாரணமாக சின்னத்திரை நடிகைகள் பிகினியில் தோன்றுவதில்லை என்பதும், வெகு அரிதாகவே சின்னத்திரை நடிகைகள் சமூக வலைதளங்களில் தங்களுடைய பிகினி புகைப்படங்களை

கிளப் ஹவுஸ்-ல் கெத்தாக பேசிய கிஷோர் கே சுவாமி.....!கொத்தாக தூக்கிய போலீஸ்.....!

அரசியல் தலைவர்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறாக பேசிய கிஷோர் கே சுவாமியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

என்னை கடித்துவிட்டது… கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இளைஞர் ஒருவர் கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.