யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைக்கும்?

தமிழகச் சட்டப்பேரவையில் நேற்று பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள 5 பவுன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி பயனாளர்களின் 51 விவரங்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் இதனால் தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு?

2021 ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.

ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களிலிருந்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகை ஈட்டின்பேரில் கடன் பெற்றிருந்தால் அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.

தவறாக AAY (அந்தியோதயா அன்ன யோஜன) குடும்ப அட்டையைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தி நகைக்கடன் பெற்றவர்கள். மற்றும் இதுபோன்ற மேலும் சில தேர்வுகளில் வழங்கப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்ய இயலாது” என்று முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளிவந்தவுடன் முறையற்ற வகையில் தள்ளுபடி பெற வேண்டும் என்கிற தவறான நோக்கத்தோடு நகைக்கடன்களைப் பெற்றுள்ளனர். குறிப்பாக சில மாவட்டங்களில் இதுபோன்ற நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சங்கங்களின் மீது தகுந்த நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடியானது உரிய ஏழைகளுக்கு கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் இதில் பயிர்க்கடன் தள்ளுபடியில் நடைபெற்றது போன்று தவறு நடக்காத வண்ணம் பயனாளர்களின் 50 க்கும் மேற்பட்ட தரவுகள் திரட்டப்பட்டு அதனைப் பகுப்பாய்வு செய்து பின்னரே கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுன் நகைக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளன.

அந்த வகையில் அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்த முதல்வர் கூட்டுறவு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முழுமையான விவரங்களை கூட்டுறவு சங்கம் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More News

அமெரிக்க ஓபன் டென்னிஸ்ஸில் மிரட்டிய வீரர்… அசுரத்தனமான ஆட்டத்தால் வெற்றி!

அமெரிக்க ஓபன் ஒற்றையர் ஆடவர் பிரிவில் விளையாடிய ரஷ்ய வீரர் டெனில் மெட்வதேவ்

6 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று சுமார் 1500 பேர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது என்பதும் தெரிந்ததே.

வடிவேலுவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விதித்த நிபந்தனை!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வடிவேலு மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்பதும் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர்' என்ற திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார்

நீட் தேர்வுக்கு இரண்டாவது பலி: தேர்வு எழுதிய பின் தற்கொலை செய்து கொண்ட மாணவி!

கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்று போராடி வரும் நிலையில் நேற்று முன்தினம் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும்

விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்': மூன்று நிமிட வீடியோ வைரல்

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிய 'கோடியில் ஒருவன்' என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும்