சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் 40 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் வேகம் எடுத்து வருகிறது. கடந்த 3 நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் கிட்டத்தட்ட பாதிபேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு உள்ள ஒரு சில ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அனைத்து ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழகத்தில் மீண்டும் கொரனோ வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியமர்த்த நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அலுவலகம் வந்து பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பாக மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட கமல்-ரஜினி பட நாயகி!

கமலஹாசன் நடித்த 'சகலகலா வல்லவன்', 'காதல் பரிசு' உட்பட பல படங்களிலும், ரஜினிகாந்த் நடித்த 'எங்கேயோ கேட்ட குரல்' 'மாவீரன்' உள்பட பல படங்களிலும், நடித்தவர் நடிகை அம்பிகா.

மீண்டும் தொடங்கியது 'அண்ணாத்த' படப்பிடிப்பு: கலந்து கொண்டவர்கள் யார் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'.

நீருக்கு அடியில் பிகினி… பாலிவுட் நடிகையின் அசர வைக்கும் வைரல் புகைப்படம்!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட்.

பாலிவுட் படத்தின் விஜய்சேதுபதியின் ஸ்டைலிஷ் லுக்: வைரல் புகைப்படம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே

காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி!

காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.