கொரோனா எதிரொலி: சூடுபிடித்து இருக்கும் மாட்டுக் கோமியம் மற்றும் சாணத்தின் விற்பனை!!!

  • IndiaGlitz, [Wednesday,March 18 2020]


கொரோனாவை மூலதனமாக வைத்து கிருமிநாசினி பொருட்களின் விற்பனை சூடுபிடித்த நிலையில் தற்போது மாட்டுக் கோமியம் மற்றும் சாணம் கூட விற்பனையில் முதன்மை இடம் பிடித்திருக்கிறது. 2 மாடுகளைச் சொந்தமாக வைத்துள்ள கொல்கத்தாவைச் சேர்ந்த மஹாபூப் அலி அதன் சாணம் மற்றும் கோமியத்தைத் தற்போது விலைக்கு விற்று வருகிறார்.

அவரிடம் கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்காக மாட்டுக் கோமியம் மற்றும் சாணத்தை பலர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒரு லிட்டர் கோமியத்தின் விலை ரூ.500 ஆகவும், ஒரு கிலோ பசுவின் சாணம் ரூ. 500 ஆகவும் விற்பனை செய்யப் படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

அண்மையில் இந்து மகா சபையினர் மாட்டுக் கோமியத்தை கொரோனா விற்கு தடுப்பு மருந்தாகக் கூறிய நிலையில் தற்போது கொல்கத்தாவில் மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்தின் விற்பனை சூடு பிடித்து இருக்கிறது. இது குறித்து மஹாபூப் அலி கூறும்போது, பசுவின் பால் பொருட்களை விட சாணம் மற்றும் கோமியம் அதிகமான வருமானத்தை பெற்றுத் தருவதாகக் குறிப்பிட்டு உள்ளார்.

More News

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்: கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை, மனைவியும் அவருடைய கள்ளக்காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் விழுப்புரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் 'ஹே சினாமிகா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்குராக அறிமுகமாக இருக்கும் படம் 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைத்ரி நடிக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு

ஓசியா கொடுத்தா மட்டும் சாப்பிடுறாங்க: சிக்கன் கடைக்காரர்கள் புலம்பல்

சிக்கன் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவுவதாக கிளம்பிய வதந்தியால் தமிழகம் முழுவதும் சிக்கன் மற்றும் முட்டை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

முடியாது என கமல் சொன்னதை, செய்து காட்டிய ஷங்கர் 

சமீபத்தில் 'இந்தியன் 2' படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் உடைந்து விழுந்த விபத்தில், ஷங்கரின் உதவியாளர் உள்பட 3 பேர் பலியாகினர் என்பது தெரிந்ததே.

கோழி, முட்டைகளைத் தாராளமாகச் சாப்பிடலாம்; அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கோழி மற்றும் இறைச்சி பொருட்களின் விற்பனை சரிந்து வருவதாகக் கூறப்பட்டது.