close
Choose your channels

முடியாது என கமல் சொன்னதை, செய்து காட்டிய ஷங்கர் 

Wednesday, March 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் உடைந்து விழுந்த விபத்தில், ஷங்கரின் உதவியாளர் உள்பட 3 பேர் பலியாகினர் என்பது தெரிந்ததே. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று இயக்குனர் ஷங்கர் உள்பட 23 பேர்கள் விபத்து நடந்த இடத்தில் விபத்து எப்படி நடந்தது என்று நடித்து காட்டுமாறு சம்மன் அனுப்பப்பட்டது

இந்த சம்மனை அடுத்து ஷங்கர் உள்ளிட்ட 23 பேர் இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் கிரேன் விழுந்து உடைந்த போது என்ன நடந்தது என்பதை நடித்து காட்டினர். இதனை காவல்துறையினர் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த வீடியோ காட்சியின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை தொடங்க இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விபத்து எப்படி நடந்தது என்பதை நடித்து காட்டுமாறு தன்னை போலீசார் துன்புறுத்துவதாக கமலஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது அவர் நடித்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.