தமிழகத்தில் வீரியம் ஆகியுள்ள கொரோனா வைரஸ்: அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை தினந்தோறும் மூன்று இலக்கத்தில் இருந்த கொரோனாவின் பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நேற்று 1927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் புதிய உச்சபட்ச எண்ணிக்கையை பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தன்மை மாறி உள்ளது என்று தற்போது தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் வீரியம் அதிகமாகியுள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீரியம் ஆகியுள்ள கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களிடையே பரவும் என்ற அச்சம் இருப்பதால் பொதுமக்கள் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் அறிவுரையாக உள்ளது.

More News

இரண்டாம் பாதியாவது சந்தோஷமா இருக்குமா? கவினின் புலம்பல் பதிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் புகழ்பெற்ற நடிகர் கவின், அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பதை பார்த்து வருகிறோம்.

மொட்டை தலைக்கு முத்தம் கொடுத்த அமலாபால்: நிலவின் ஒளியில் காதல்!

நடிகை அமலாபால் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே.

சென்னையில் 1407 பேருக்கு கொரோனா பாதிப்பு: இன்று தமிழகத்தில் எவ்வளவு?

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் ஜெட் வேகத்தில் எகிறி கொண்டிருக்கும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

திடீரென பிங்க் நிறத்தில் மாறிய ஏரி: காரணம் தெரியாமல் குழம்பிய விஞ்ஞானிகள்!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க லோனார் ஏரி பச்சை நிறத்தில் இருந்து பிங்க் நிறமாக மாறியிருக்கிறது. இதைப் பார்த்த பொது மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இந்திய- சீன எல்லை பதற்றத்துக்குக் காரணம் ஒரே ஒரு சாலைதான்: எதற்கு இவ்வளவு முக்கியத்துவம்???

இந்திய –சீன எல்லைப் பகுதியில் கடந்த மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சீன அரசு இராணுவ வீரர்களை குவித்தது.