கொரோனா பாதிப்பு இறங்கியுள்ளது...! நிலவரம் கூறுவது என்ன...?

  • IndiaGlitz, [Tuesday,June 08 2021]

இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கிட்டத்தட்ட 63 நாட்களுக்குப்பிறகு, 1 லட்சத்துக்கும் குறைந்துள்ளது.

இரண்டாம் கட்ட கொரோனா அலையானது நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தங்களின் பல உறவுகளை கொரோனாவால் இழந்து வாடி வருகிறார்கள். மூன்றாம் அலையில் குழந்தைகள் பலரும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 86,498 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு என்பது 2,89,96,473- ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பை பார்த்தால், கடந்த 63 நாட்களை விட மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அதேபோல் 24 மணிநேரத்தில் 2,123 பேர் இத்தொற்றால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,51,309-ஆக உயர்ந்துள்ளது.

அண்மையில் நோய் குணமாகி 1,82,282 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,73,41,462-ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 13,03,702 -பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை நம் நாட்டில், 23,61,98,726 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இதுகுறித்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிறந்த நாள் அன்று தற்கொலை செய்து கொண்ட திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மனைவி!

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது

சைஸ் என்ன? என கேட்ட ரசிகருக்கு தனது பாணியில் பதில் சொன்ன பார்வதி நாயர்!

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகை பார்வதி நாயர். அந்த படத்தில் அவர் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்

மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை தர வேண்டும்....! உயர்நீதிமன்றம் உத்தரவு....!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், மூன்றாம் பாலினத்தவருக்கு முன்ன&#

போலி ஆன்மிகவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்...?சீமான் சரமாரி கேள்வி.....!

பிஞ்சுக்குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த, கொடூரமான போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மற்றும் சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மநீம முக்கிய தலை.....நாளை திமுக-விற்கு இடம்பெயருகிறது...!

கமல்ஹாசன் அவர்களின் மக்கள் நீதி மய்யத்தில், முக்கிய புள்ளியாக இருந்த திரு.மகேந்திரன் அவர்கள், நாளை திமுக-வில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.