தமிழகத்திலும் நுழைந்த கொரோனா: காஞ்சிபுரம் நபருக்கு அறிகுறி என தகவல்

சீனாவை அடுத்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா பரவிவிட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

ஏற்கனவே இந்தியாவில் 34 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் நேற்று ஓமனில் இருந்து சென்னைக்கு வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக செய்திகள் வெளியானது. 45 வயதாகும் இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்றும் தற்போது அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் இருந்து ஓமன் சென்ற இவர் தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மேலும் ஈரான் நாட்டிலிருந்து வந்த இரண்டு பேர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் இவர்கள் மூவரும் தற்போது தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் இந்தியாவில் மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் சோதனை மையங்கள் மற்றும் சிகிச்சை மையங்களை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது முதல் முதலாக ஒரு நபருக்கு ஒரு வைரஸ் தாக்கப்பட்ட உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

More News

'மாஸ்டர்' ஆடியோ விழாவில் உலகத்தையே கலக்கிய நடன பிரபலங்கள்: ஆச்சரியமான தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் ஆடியோ விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில்

'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா: தளபதி ரசிகர்களை கொண்டாட வைக்கும் அப்டேட்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளதாக வந்த செய்தியால் சற்று முன்னர் பார்த்தோம். இந்த நிலையில் முதல் அப்டேட் தற்போது வெளிவந்து விட்டது 

'டிசைன் டிசைனா அப்டேட்':'மாஸ்டர்' கொண்டாட்டம் ஆரம்பம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இண்டர்நெட்டை கலக்கும் கீர்த்தி பாண்டியனின் நீச்சலுடை புகைப்படங்கள்

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் 'தும்பா' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் விரைவில் அவர் தனது தந்தை அருண்பாண்டியன் உடன் இணைந்து

இந்த படத்தை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்: கலைப்புலி எஸ்.தாணு

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் மோகன்லால், பிரபு நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான 'சிறைச்சாலை' என்னும் பிரமாண்டமான திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற