சூர்யா உள்பட 8 நடிகர்கள் மீதான வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,July 12 2017]

கடந்த 2009ஆம் ஆண்டு முன்னணி தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியான செய்தி காரணமாக நடிகர் சங்கம் சார்பில் கண்டனக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அன்றைய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், சூர்யா, சரத்குமார், விவேக், அருண் விஜயகுமார், விஜயகுமார், சேரன், ஸ்ரீப்ரியா, சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரோசாரியோ மரியசூசை என்ற பத்திரிக்கையாளர் உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணையில் ஆஜாராகாத சூர்யா உள்பட 8 நடிகர்களுக்கு உதகை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

ஆனால் இந்த பிடிவாரண்டுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர்கள் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று சூர்யா உள்பட 8 நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து சூர்யா உள்பட 8 நடிகர்களும் விடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி'க்கு இன்று பூஜை

ஒரு படத்தின் பூஜை போட்டவுடன் பார்ட்டி வைப்பது சினிமாக்காரர்களின் வழக்கம். ஆனால் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு வித்தியாசமாக 'பார்ட்டி'க்கு பூஜை போட்டுள்ளார். ஆம், வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படமான 'பார்ட்டி' என்ற படத்திற்கு இன்று சென்னையில் பூஜை நடத்தப்பட்டது...

பிக்பாஸ்: கமல்ஹாசனை கைது செய்ய போலீஸ் கமிஷனரிடம் மனு

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, விறுவிறுப்பு, கேலிக்கூத்து, சர்ச்சைகள் ஆகியவைகள் கலந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிப்பதாகவும், எனவே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும், இதில் பங்கேற்ற&

கொடைக்கானலில் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிலா திருமணம்

சமீபத்தில் நடைபெற்ற மணிப்பூர் மாநில தேர்தலில் போட்டியிட்ட சமூக சேவகி இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்...

பி.வாசு இயக்கும் அடுத்த படத்தில் அஜித்-விஜய் நாயகி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பணக்காரன்', 'மன்னன்', சந்திரமுகி', உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் பி.வாசு. சமீபத்தில் இவர் இயக்கிய 'சிவலிங்கா' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது...

ஆணவ கொலைக்கு பலியான சங்கரின் மனைவி கவுசல்யாவின் 2வது திருமண நாள் கவிதை

21ஆம் நூற்றாண்டின் டெக்னாலஜி காலத்திலும் இன்னும் சாதி மோதல்கள், ஆணவக்கொலை, கெளரவக்கொலை ஆகியவை ஆங்காங்கே நடந்து வருவது மனித குலத்திற்கே ஒரு இழுக்காக கருதப்படுகிறது...