close
Choose your channels

தேடப்படும் குற்றவாளியாக பிரபல நடிகையை அறிவித்த நீதிமன்றம்.. உடனே கைது செய்ய உத்தரவு..!

Wednesday, February 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன், விஜயகாந்த் உட்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை தேடப்படும் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை உடனே கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடித்த ’சலங்கை ஒலி’ ’நினைத்தாலே இனிக்கும்’ ’தசாவதாரம்’ மற்றும் விஜயகாந்த் நடித்த ’ஏழை ஜாதி’ உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஜெயப்பிரதா.

இவர் அரசியல்வாதியாகவும் இருக்கும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தபோது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக ராம்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயப்பிரதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் ஜெயப்பிரதா ஆஜராகவில்லை என்பதை அடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகை ஜெயப்பிரதா திடீரென தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் அவர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று காவல் துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.