ஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் கள்ளக்காதல்: மாடல் அழகிக்க்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்
- IndiaGlitz, [Thursday,November 07 2019]
திருமணமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த மாடல் அழகி ஒருவர், ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவிக்கு நஷ்ட ஈடாக ரூ.70 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவருக்கும் டாக்டர் பெண் ஒருவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் முடிந்து இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு மாடல் அழகி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் லிவிங் ரிலேஷனில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது
இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த டாக்டர் மனைவி, மாடல் அழகியால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், திருமணமான ஒரு பெண்ணுக்கு மன உளைச்சல் கொடுத்ததற்காக ரூ.70 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டது. இதனால் மாடல் அழகி அதிர்ச்சியில் உச்சத்திற்கே சென்றுள்ளார்.