close
Choose your channels

நடிகர் சங்கத்திற்கும் தனி அதிகாரி: தமிழக அரசு அதிரடி

Thursday, November 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் விஷால் தலைமையான தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமனம் செய்தது என்பதும் அதன் பின்னர் பாரதிராஜா, எஸ்வி சேகர் உள்ளிட்ட வழிகாட்டும் குழு ஒன்றையும் தமிழக அரசு நியமனம் செய்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை அடுத்து நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரியை நியமிக்கும் திட்டத்தில் தமிழக அரசு இருப்பதாக கூறப்பட்டது. அதனை உறுதி செய்வது போல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷாலுக்கு பதிவுத் துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில், ‘நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமிக்க கூடாது’ என்று விளக்கம் கேட்கப்பட்டது

இந்த நோட்டீசுக்கு நடிகர் சங்கத்தில் இருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் ’நடிகர் சங்கம் சிறப்பாக இயங்கி வருவதாகவும், எந்தவிதமான ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக செயல்படும் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் தை அதிகாரியை நியமிக்க கூடாது என்றும் தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கீதா என்பவரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியாக நியமனம் செய்து பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து நடிகர் சங்கத்தின் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.