இந்தியாவில் 50% குழந்தைகளுக்கு கொரோனா? பீதியை கிளப்பும் எய்ம்ஸ் இயக்குநர்!

  • IndiaGlitz, [Monday,August 16 2021]


இந்தியாவில் 3 ஆம் அலை கொரோனா தாக்கம் ஏற்படுவதற்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலோரி, இதுவரை இந்தியாவில் உள்ள 50% குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்.

இந்தியாவில் 3 ஆம் அலை கொரோனா தாக்கம் குறித்த அச்சம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுகுறித்து பேசிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலோரி இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை தாக்கம் இப்போது ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்கா விட்டால் இதுபோன்ற நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை ஏற்படுமா? இல்லையா? என்பதைக் கணிக்க முடியாது. ஆனால் இதுவரை 50% குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. கூடவே அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி வந்துவிடும். அப்போது இந்த நிலைமை மாறும். எனவே அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பு கொரோனா தாக்கினாலும் அவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது எனத் தெரிவித்து உள்ளார்.

More News

விமானத்தின் டயரைப் பிடித்துத் தொங்கிய 3 பேர்… அலற வைக்கும் ஆப்கன் வீடியோ!

ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை தாலிபான்கள் தற்போது மூடியுள்ளனர்.

கார் வாங்குனதுக்கு அப்புறம் சின்னராச கையில புடிக்க முடியலை: ஷிவானியை கலாய்த்த நெட்டிசன்ஸ்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் புத்தம் புதிய ஆடி கார் வாங்கினார் என்பதும் அந்த காருடன் கூட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு

விஜய்சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்தின் முக்கிய அப்டேட்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த படங்களில் ஒன்று 'துக்ளக் தர்பார்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் தெரிந்ததே

புல்லட்டில் நின்று ஹாட் போஸ் கொடுத்த நடிகை ரக்ஷிதா.....! புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.....!

சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி. பெயருக்கேற்றாற் போல் அழகிலும்,

மகளின் முக்கியமான புகைப்படத்தை வெளியிட்டு புளங்காகிதம் அடைந்த குஷ்பு!

ரஜினி, கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் குஷ்பு என்பதும், தற்போது நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே.