close
Choose your channels

புல்லட்டில் நின்று ஹாட் போஸ் கொடுத்த நடிகை ரக்ஷிதா.....! புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.....!

Monday, August 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி. பெயருக்கேற்றாற் போல் அழகிலும், நடிப்பிலும் கைதேர்ந்தவர் என்று சொல்லலாம். விஜய் தொலைக்காட்சியில் ஆரம்ப காலகட்டத்தில் வெளியான "பிரிவோம் சந்திப்போம்" என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி, சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களை நடிப்பால், தன் வசம் இழுத்துக்கொண்டார். சிறந்த நடிகைக்கான விருதை விஜய் தொலைக்காட்சியில் இருமுறை பெற்றிருக்கிறார். ஜீ சேனலில் ஒரு சீரியலிலும், ஒருசில ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்று உள்ளார். "நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற சீரியல் மூலம், நடிகர்,ஆர்.ஜே செந்திலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஒருசில தமிழ் படங்களில் சிறிய காட்சிகளிலும், நடிகையாகவும் நடித்துள்ளார். பல விளம்பர படங்களிலும் தோன்றியுள்ளார்.

இந்த நிலையில் ரக்ஷிதா கன்னட படம் ஒன்றில் நாயகியாக நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார் என்ற செய்தி அண்மையில் வைரலாக பரவியது. இதை அவர் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தற்போது ரக்ஷிதா இன்ஸ்டாகிராமில் புல்லட்-டில் அமர்ந்திருப்பது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் "வலி என்பது பெண்ணை போர்வீரராக மாற்றும்" என்பதை கேப்ஷனாக போட்டு பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இதற்கு லைக்ஸ்களையும், கமெண்ட்டுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்கள். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.