ஓபிஎஸ் அணிக்கு தாவுகிறாரா சி.ஆர்.சரஸ்வதி?

  • IndiaGlitz, [Monday,April 17 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது முதல், அவர் மறைந்த பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு வரை அடிக்கடி சமூக வலைத்தள பயனாளிகளிடம் சிக்கி சின்னாபின்னாமானவர்களில் ஒருவர் சி.ஆர்.சரஸ்வதி. சமீபத்தில் கூட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இவர் பிரச்சாரம் செய்ய சென்றபோது அந்த பகுதி மக்கள் அழுகிய தக்காளியால் இவரை தாக்கியதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் அணியின் கை ஓங்கி வருவதாக கூறப்படுகிறது. சசிகலா ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில் தற்போது டிடிவி தினகரனும் கைது செய்யப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதால், சி.ஆர்.சரஸ்வதி தற்போது ஓபிஎஸ் அணியில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர் மட்டுமின்றி தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் பா வளர்மதியும் ஓபிஎஸ் அணியில் சேரவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இரண்டாக பிளவுபட்ட அதிமுகவே இணையவுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓபிஎஸ் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ள நிலையில் சி.ஆர்.சரஸ்வதியும், வளர்மதியும் முந்திக்கொண்டு ஓபிஎஸ் அணியில் இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்ரமுடன் வேலை செய்யும்போது மன அழுத்தம் இல்லை. பிரபல இயக்குனர்

சீயான் விக்ரம் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் நேரிலும் தொலைபேசியிலும் இணையதளங்கள் மூலமும் வாழ்த்து கூறி வருகின்றனர்...

சரவணா ஸ்டோர் ஓனருடன் நயன்தாரா நடிப்பது உண்மையா?

கடந்த இரண்டு நாட்களாக மிமி கிரியேட்டர்களுக்கு கிடைத்த அல்வா போன்ற விஷயம் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அவர்கள் நயன்தாராவுடன் நடிக்கவுள்ளதாக வந்த செய்திதான். ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட அனைத்து சமூகவலைத்தளங்கள், இணையதளங்களும் இந்த செய்தியை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

இரட்டை இலை லஞ்ச விவகாரத்தில் தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்

இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் பெறுவதற்காக அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன் ரூ.60 கோடி வரை பேரம் பேசியதாகவும், அதற்கு அட்வான்ஸாக ரூ.1.30 கோடி வரை பெற்றதாகவும் டெல்லியில் சுகேஷ் சந்தர் என்பவர் இன்று காலை செய்யப்பட்டார்...

சரத்குமாரின் 'இரண்டாவது ஆட்டம்' ஆரம்பம்

பிரபல நடிகரும், முன்னாள் நடிகர் சங்க தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், கடந்த 2015ஆம் ஆண்டு நடித்த 'சண்டமாருதம்' படத்திற்கு பின்னர் தமிழில் வேறு படங்களில் நடிக்கவில்லை...

டெல்லியில் கைதான சுகேஷ் சந்திரா யார் என்றே எனக்கு தெரியாது! டிடிவி தினகரன்

ஒன்றுபட்ட அதிமுகவின் சின்னமான 'இரட்டை இலை'யை கைப்பற்றும் அணியே உண்மையான அதிமுக என பொதுமக்கள் கருதுவார்கள் என்பதால் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் அந்த சின்னத்தை பெற கடுமையாக போராடி வருகின்றன...