close
Choose your channels

சரத்குமாரின் 'இரண்டாவது ஆட்டம்' ஆரம்பம்

Monday, April 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகரும், முன்னாள் நடிகர் சங்க தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், கடந்த 2015ஆம் ஆண்டு நடித்த 'சண்டமாருதம்' படத்திற்கு பின்னர் தமிழில் வேறு படங்களில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் அவர் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படம் 'இரண்டாவது ஆட்டம்'. இந்த திகில் படத்தை அறிமுக இயக்குனர் பிருத்வி ஆதித்யா இயக்கவுள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் பிருத்வி கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பு இரவு நேர சினிமா காட்சியை இரண்டாவது ஆட்டம் என்று தான் அழைப்பார்கள். இது கிரைம் த்ரில்லர் கதை. ஹீரோ போலீஸ் ஆபீசர். இரவு நேர சினிமா காட்சி, அதன் பின்னணியில் நடக்கும் க்ரைம், அது ஏன் நடக்கின்றது, யார் செய்கிறார்கள் என்ற ரீதியில் தை நடக்கின்றது.

போலீஸ் கேரக்டரில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சரத்குமார் மீண்டும் நடிக்கின்றார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது' என்று கூறியுள்ளார்.

இயக்குனர் பிருத்வி குறும்பட இயக்குனராகவும், ஒருசில படங்களில் உதவி இயக்குனராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.