'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்: ஆச்சரிய தகவல்!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர்தான் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் தான் நடித்திருப்பதாகவும் இந்த கேரக்டர் குறித்து இப்போதைக்கு என்னால் அதிகம் சொல்ல முடியாது என்றும் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் அவர் நடித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி மற்றுமொரு தமிழ் படத்திலும் சன்னி லியோனுடன் ஒரு ஹிந்திப் படத்திலும் கன்னட படம் ஒன்றிலும் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சினிமாவிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பீஸ்ட்' புரமோ படப்பிடிப்பில் விஜய்யுடன் கலந்து கொண்ட பிரபலங்கள் யார் யார்?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

டாஸ்குகள் முடிவுக்கு பின் நாமினேஷனில் இருப்பவர்கள் யார் யார்? பிக்பாஸ் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்படுவதாகவும் ஆனால் அடுத்தடுத்து நடைபெறும்

திருமணமான ஒரே மாதத்தில் கணவரை பிரிகிறாரா 'செம்பருத்தி' ஷபானா?

'செம்பருத்தி' சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷபானாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில் ஒரே மாதத்தில் அவர்கள் பிரிய இருப்பதாக செய்திகள் கசிந்து வருவது பெரும்

விமான விபத்து… பிரபல இசையமைப்பாளர் குடும்பத்துடன் பலியான சோகம்!

தென் அமெரிக்க நாடான டொமினிக்கன் குடியரசு நாட்டில் விமான விபத்து ஏற்பட்டு பிரபல இசையமைப்பாளர் ஜோஸ் ஏஞ்சல்

ராஜூவை கட்டிப்பிடித்து கண்ணீர்விடும் சஞ்சய்: என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரோமோ வீடியோவில் ராஜுவை கட்டிப்பிடித்துக்கொண்டு சஞ்சீவ் கண்ணீர் விடும் காட்சி இருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.