close
Choose your channels

ராஜூவை கட்டிப்பிடித்து கண்ணீர்விடும் சஞ்சய்: என்ன காரணம்?

Friday, December 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரோமோ வீடியோவில் ராஜுவை கட்டிப்பிடித்துக்கொண்டு சஞ்சீவ் கண்ணீர் விடும் காட்சி இருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 74 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 75 ஆவது நாள் நடைபெற உள்ளது என்பதும் விரைவில் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் அறிவித்திருந்தார். அதன்படி தாமரை வெற்றி பெற்றதையடுத்து அவர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பதும், ஏற்கனவே சிபி விடுவிக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று நாமினேஷனில் இருந்து தப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக அணி பிரிய வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க விரும்புவோரின் புகைப்படத்தை காட்டவேண்டும் என்றும், இருவரும் ஒரே புகைப்படத்தை காண்பித்தால் அந்த நபர் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்வார் என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இதனை அடுத்து போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக பிரிந்து புகைப்படத்தை காட்டுகின்றனர். அந்தவகையில் ராஜூ மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் ஜோடியாக இருந்த நிலையில் இருவருமே சஞ்சீவின் புகைப்படத்தை காட்டியதை அடுத்து சஞ்சீவ் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்வார் என்று தெரிகிறது.

என்னுடைய குடும்பத்தினர் வரும் வரையில் நான் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என சஞ்சீவ் கூறினார். பிக்பாஸ் வீட்டிற்கு எல்லா ஃபேமிலியும் போகும்போது நானும் பிக்பாஸ் வீட்டிற்கு போய் பிக்பாஸ் வீட்டை சுற்றி பார்க்க வேண்டுமென சஞ்சீவின் பாப்பா விரும்பினார் என்பதால் அவருடைய புகைப்படத்தை காண்பிக்கிறேன் என்று ராஜூ கூறினார். தன்னுடைய புகைப்படத்தை எடுத்து காட்டியதை அடுத்து ராஜூவை கட்டிப்பிடித்துக்கொண்டு சஞ்சீவ் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் வடித்த காட்சியுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos