சிஎஸ்கே தக்க வைத்து கொண்ட நான்கு வீரர்கள் இவர்களா?

  • IndiaGlitz, [Tuesday,November 30 2021]

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைந்து உள்ளதை அடுத்து ஒட்டுமொத்த 10 அணிகளுக்குமான வீரர்களின் ஏலம் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் தாங்கள் தக்கவைத்துக்கொள்ளும் நான்கு வீரர்கள் குறித்த பட்டியலை இன்று சமர்ப்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டுள்ள நான்கு வீரர்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கேப்டன் எம்எஸ் தோனி, ஜடேஜா, ருத்ராஜ் மற்றும் மொயின் அலி ஆகிய நால்வரையும் சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் மும்பை அணி ரோகித்சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இருவரையும் தக்கவைத்துக் கொண்டிருப்பதாகவும், பெங்களூர் அணியின் விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகிய இருவரையும், டெல்லி அணி ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அக்‌ஷர் படேல், நோர்ட்ஜே ஆகியவர்களையும் ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனையும் தக்க வைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

கொரோனா பாதிப்பில் கமல்: 'விக்ரம்' படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உலக நாயகன் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்டது என்பதும், அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி

அதிகாலை 3 மணிக்கு ப்ரியா அட்லி எடுத்த செல்பி: இணையத்தில் வைரல்!

அதிகாலை 3 மணிக்கு எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை பிரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

டிவிட்டர் நிறுவனத்தின் CEO-ஆன இந்தியர்… யார் இந்த பராக் அகர்வால்?

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்ட டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியாவை

இந்தியாவில் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு… அதிர்ச்சி தகவல்!

உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 4 வெளிநாட்டு பயணிகளிடம் ஒமைக்ரான் வகை

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 10 போட்டியாளர்கள்: யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்பது அதேபோல் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் தெரிந்ததே.