close
Choose your channels

சிஎஸ்கே தக்க வைத்து கொண்ட நான்கு வீரர்கள் இவர்களா?

Tuesday, November 30, 2021 • தமிழ் Comments
CSK
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைந்து உள்ளதை அடுத்து ஒட்டுமொத்த 10 அணிகளுக்குமான வீரர்களின் ஏலம் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் தாங்கள் தக்கவைத்துக்கொள்ளும் நான்கு வீரர்கள் குறித்த பட்டியலை இன்று சமர்ப்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டுள்ள நான்கு வீரர்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கேப்டன் எம்எஸ் தோனி, ஜடேஜா, ருத்ராஜ் மற்றும் மொயின் அலி ஆகிய நால்வரையும் சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் மும்பை அணி ரோகித்சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இருவரையும் தக்கவைத்துக் கொண்டிருப்பதாகவும், பெங்களூர் அணியின் விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகிய இருவரையும், டெல்லி அணி ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அக்‌ஷர் படேல், நோர்ட்ஜே ஆகியவர்களையும் ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனையும் தக்க வைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.