ஆடு மேய்த்தற்காக மற்றவர்கள் காலில் விழ வைத்தச் சம்பவம்… பட்டியல் இனத்தவருக்கு நேர்ந்த கொடுமை!!!

  • IndiaGlitz, [Tuesday,October 13 2020]

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆடு மேய்த்த குற்றத்திற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த பால்ராஜ் எனும் நபரை வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் காலில் விழ வைத்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவில்பட்டி அடுத்த ஓலைகுளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் 100 ஆடுகள் கொண்ட பட்டியை வைத்து ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கு எனும் மேல் வகுப்பைச் சேர்ந்த ஒருவரும் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 8 ஆம் தேதி இருவரும் அருகருகே தங்களது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பால்ராஜின் ஒரு ஆட்டுக்குட்டி தவறுதலாக சிவசங்குவின் ஆட்டுகுட்டிகளோடு சேர்ந்து இருக்கிறது. இதைப் பார்த்த பால்ராஜ் உடனே தனது குட்டியை மீட்க சிவசங்குவின் ஆடுகள் இருக்கும் பகுதிக்கு சென்றிருக்கிறார். ஆனால் இந்தச் சம்பவத்திற்கு சிவசங்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து ஆடு மேய்க்கும் குச்சியை எடுத்து பால்ராஜை அடிக்க ஓங்கியதாகவும் கூறப்படுகிறது.

அப்படி குச்சியை ஓங்கும்போது அதை தடுக்க பால்ராஜ் முற்பட்டதாகவும் ஆனால் அந்த குச்சி தவறுதலாக சிவசங்குவின் மீது பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பில் இருந்தும் அவர்களது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கின்றனர். இதில் சிவசங்குவின் உறவினர்கள் எங்களது பகுதிக்கு நீ வந்தது குற்றம் என பால்ராஜை மிரட்டி அவர்களின் கால்களின் விழ வைத்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தின்போது பால்ராஜின் மகன் கருப்புசாமி தனது அப்பாவிற்கு நடக்கும் தாக்குதலை தடுக்க முற்பட்டதாகவும் அதனால் இவரும் தாக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கருப்புசாமி தனது செல்போனில் வீடியோ எடுக்க முற்பட்டபோது அந்த செல்போனை சிவசங்குவின் உறவினர்கள் வாங்கி அதே இடத்தில் உடைத்து எறிந்தும் இருக்கின்றனர்.

ஆனால் பால்ராஜ் மற்றவர்கள் காலில் விழும் காட்சியை சிவசங்குவின் உறவினரான கார்த்திக் எனும் இளைஞர் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனால் இச்சம்பவம் பொதுவெளியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு தாக்குதல் நடத்தியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு கோரிக்கையும் வைக்கப்பட்டு இருக்கிறது.

More News

பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த டாக்டர்: உடல்நலமின்றி வெளியேறிய போட்டியாளர்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த வாரம் ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அறந்தாங்கி நிஷாவின் அரட்டைகளும், சுரேஷ் சக்கரவர்த்தியின் சேட்டைகளும் தினந்தோறும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக

நடிகர் சங்கத்தில் இருந்து திடீரென விலகிய கமல், தனுஷ் பட நடிகை!

இயக்குனர் சசி இயக்கிய 'பூ' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகை பார்வதி, அதன் பின்னர் சரத்குமாரின் 'சென்னையில் ஒரு நாள்' தனுஷின் 'மரியான்' கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்'

பாஜகவில் சேருகிறாரா விஜய் தந்தை? அவரே அளித்த விளக்கம்!

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் தேர்வு செய்யப்பட்ட பின் பல திரையுலக பிரமுகர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இன்னும் ஒரு சில பிரபலங்கள் இணையப் போவதாக வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

தோனி மகளை மிரட்டிய 16 வயது சிறுவன் கைது குறித்து நடிகர் மாதவன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியை பெற்று வருவதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

பதில் சொல்லிட்டு போங்க: சுரேஷை வச்சு செஞ்ச வேல்முருகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சுரேஷ் சக்ரவர்த்தி இதுவரை யாருடன் சண்டை போடவில்லை என்பதை மட்டும்தான் கணக்கு பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது.