close
Choose your channels

தோனி மகளை மிரட்டிய 16 வயது சிறுவன் கைது குறித்து நடிகர் மாதவன்!

Tuesday, October 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியை பெற்று வருவதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. குறிப்பாக தோனியின் மனைவி சாக்சி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் பகுதியில் அவரது ஐந்து வயது மகளுக்கு பாலியல் மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தோனி வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜார்கண்ட் அரசு செய்தது.

இந்த நிலையில் தோனியின் மனைவி சாக்சி தோனி தனது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து செய்த புகாரின் அடிப்படையில் குஜராத்தை சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி தோல்வி அடைந்ததை அடுத்தே அந்த சிறுவன் தோனி மகளுக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் 16 வயது சிறுவனின் மிரட்டலும், அதற்கு அதிரடியாக போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து கருத்து கூறிய நடிகர் மாதவன், ‘எம்.எஸ். தோனியின் மகளுக்கு எதிராக அச்சுறுத்தல்களை வெளியிட்டதற்காக சிறுவனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு எனது பாராட்டுக்கள். கடவுள் மற்றும் சட்டத்திற்கு பயப்படாமல் இதுபோன்ற முகமற்ற அரக்கர்கள் தங்களை யார் என்ன செய்ய முடியும் என்று நினைத்து, இணையத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். சிறுவர்களாக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை தேவை’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.