கமல் ரசிகர்களால் வெளிச்சத்துக்கு வந்த முட்டை ஊழல்! ஆட்டம் ஸ்டார்ட் ஆயிருச்சு

  • IndiaGlitz, [Tuesday,August 01 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழக அரசு மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். அதுமட்டுமின்றி தனது துறையின் ஊழல் ஒன்றை தெரிவித்ததோடு ரசிகர்களையும் பொதுமக்களையும் ஊழல் குறித்த புகார்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

கமல்ஹாசனின் இந்த கோரிக்கையை அடுத்து ஏராளமான ஊழல் புகார்கள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டைகள் வழங்கியதை கமல் நற்பணி மன்றத்தினர் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார். கமல் ரசிகர்கள் முதல்முறையாக ஒரு ஊழலை கையும் களவுமாக பிடித்துள்ளதாகவும், இது ஆரம்பம்தான் என்றும் போக போக அனைத்து துறை ஊழல்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம் என்றும் ஊழலுக்கு எதிரான எங்கள் ஆட்டம் ஸ்டார்ட் ஆயிருச்சு என்றும் கமல் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More News

பிக்பாஸ்: பைத்தியங்களாக மாறும் பங்கேற்பாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்க்கு அவ்வப்போது டாஸ்க் கொடுத்து அவர்களது திறமை நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கொடுத்த ஒரு டாஸ்க்கில் அனைவரும் பைத்தியமாக இருப்பதாகவும் முதலில் யார் குணமாகி வெளியே செல்வது, யாருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்பது, யாருக்கு அதிக மருந்து மாத்திரைகள் தேவைப்படும் என்

அஜித் வழிவிட்டதால் ஆகஸ்ட் 11-ல் குவியும் படங்கள்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்றுதான் கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டது. எனவே இந்த தேதியில் 'தரமணி' தவிர மற்ற எந்த படமும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை...

ஃபெப்சி-தயாரிப்பாளர் சங்க மோதல் எதிரொலி: 'காலா', 'மெர்சல்' படப்பிடிப்பு ரத்து

கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் ஃபெப்சி சங்கத்தினர்களுக்கும் இடையே அறிக்கை போர் நடந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக ஃபெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடைபெறும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அதிரடி அறிக்கை ஒன்றும் வெளியானது...

ஜூலியை வெளியே அனுப்ப விரும்பும் ஸ்ருதிஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலில் ஜூலி வந்தபோது, நெட்டிசன்கள் அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். ஜூலையை ஃபேக் ஃபேக் என்று கூறியதால் தான் ஆர்த்தியை ரசிகர்கள் வெளியே அனுப்பினர்....

குழந்தைகளுக்காக தளபதி விஜய் ஏற்று நடித்த ரோல்: மெர்சலான ரூபன்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய்யின் ரோல்கள் குறித்து எடிட்டர் ரூபன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.