கணவருடன் சேரவிடாமல் தடுத்த மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகள்!

  • IndiaGlitz, [Friday,June 05 2020]

வரதட்சனை கொண்டுவா என கொடுமைப்படுத்தி மருமகளை கொலை செய்யும் காலம் மலையேறிவிட்டது என்றும், தற்போது வரதட்சணை கேட்டால் மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்யும் காலம் வந்துவிட்டது என்பது போல் புதுக்கோட்டையில் நடந்த ஒரு சம்பவம் தற்போது அதிர்ச்சி அளித்துள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பிரதீபா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் ரமேஷின் தாயார் ராஜாம்மாள் என்பவர் அடிக்கடி தன் மருமகள் பிரதீபாவிடம் வரதட்சனை அதிகமாக கொண்டு வா என்று தொந்தரவு செய்ததாக தெரிகிறது. மேலும் வரதட்சணை கொண்டு வந்து தரும் வரை கணவனுடன் உறவு கொள்ளக்கூடாது என்றும் அவர் தடுத்ததாகவும் தெரிகிறது.

பிரதீபா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகிய இருவரும் சந்தோஷமாக இருந்த விடாமல் எல்லா வகையிலும் ராஜம்மாள் தொந்தரவு கொடுத்ததால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரதீபா அவரை கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று ராஜம்மாள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் மருமகளிடம் காபி கேட்டுள்ளார். அந்த காபியில் ஐந்து தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்த பிரதீபா, அதன்பின் ராஜம்மாள் தூங்கியவுடன் அவரது உடலில் பெட்ரொலை ஊற்றி தீவைத்துவிட்டார். பிறகு வீட்டை வெளிப்புறமாக பூட்டி உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தீக்காயத்தால் அலறிய ராஜம்மாளை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து மாமியாரை தீ வைத்து எரித்த மருமகள் பிரதிபாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது: ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை!!!

இந்தியாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது போன்றவை வழங்கி சிறப்பிக்கப்படுவது வழக்கம்.

தனுஷ்-சன்பிக்சர்ஸ் படத்தின் இயக்குனர் யார்? பரபரப்பு தகவல்

தனுஷ் நடித்த 40வது திரைப்படமான 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும்

ஓடிடிக்கு செல்கிறதா விஜய்சேதுபதியின் அடுத்த படம்?

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது.

அமெரிக்காவில் நடக்கும் இனவெறிக்கு எதிரான போராட்டம்: ஆதரவு தெரிவித்த ட்ரம்பின் இளைய மகள்!!!

அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வரும் இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் கடந்த மே 25 ஆம் தேதி காவல் துறையினரின் அச்சுறுத்தலால் உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு நீதி

பிரபல ஹீரோவுடன் விமானத்தில் வந்தவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

தமிழில் மணிரத்னம் இயக்கிய 'ராவணன்' உள்பட ஒரு சில படங்களிலும் மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ்.