close
Choose your channels

கணவருடன் சேரவிடாமல் தடுத்த மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகள்!

Friday, June 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரதட்சனை கொண்டுவா என கொடுமைப்படுத்தி மருமகளை கொலை செய்யும் காலம் மலையேறிவிட்டது என்றும், தற்போது வரதட்சணை கேட்டால் மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்யும் காலம் வந்துவிட்டது என்பது போல் புதுக்கோட்டையில் நடந்த ஒரு சம்பவம் தற்போது அதிர்ச்சி அளித்துள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பிரதீபா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் ரமேஷின் தாயார் ராஜாம்மாள் என்பவர் அடிக்கடி தன் மருமகள் பிரதீபாவிடம் வரதட்சனை அதிகமாக கொண்டு வா என்று தொந்தரவு செய்ததாக தெரிகிறது. மேலும் வரதட்சணை கொண்டு வந்து தரும் வரை கணவனுடன் உறவு கொள்ளக்கூடாது என்றும் அவர் தடுத்ததாகவும் தெரிகிறது.

பிரதீபா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகிய இருவரும் சந்தோஷமாக இருந்த விடாமல் எல்லா வகையிலும் ராஜம்மாள் தொந்தரவு கொடுத்ததால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரதீபா அவரை கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று ராஜம்மாள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் மருமகளிடம் காபி கேட்டுள்ளார். அந்த காபியில் ஐந்து தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்த பிரதீபா, அதன்பின் ராஜம்மாள் தூங்கியவுடன் அவரது உடலில் பெட்ரொலை ஊற்றி தீவைத்துவிட்டார். பிறகு வீட்டை வெளிப்புறமாக பூட்டி உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தீக்காயத்தால் அலறிய ராஜம்மாளை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து மாமியாரை தீ வைத்து எரித்த மருமகள் பிரதிபாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.