போனின் தகாத உறவு....! மதுபோதை.....! கோவையில் குளவிக்கல்லால் கொலை...!

  • IndiaGlitz, [Monday,July 12 2021]

மகள் பலரிடம் தகாத உறவு வைத்திருந்த காரணத்தால், தாயே தலையில் குளவிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில், கணுவாய்ப்பாளையம் என்ற ஊரில் வசித்து வருபவர் தான் நாகமணி. 47 வயதுள்ள இவருக்கு கணவர் இறந்துவிட்ட நிலையில், நதியா(31) என்ற மகள் இருந்துள்ளார். தனது மகளை கடந்த 15 வருடங்களுக்கு முன்பே, புளியந்தோப்பு சோமையனூரை சார்ந்த சரவணகுமார் என்ற நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இத்தம்பதிக்கு பிரியதர்ஷினி(13), நிதீஷ் குமார்(12) என்ற குழந்தைகள் இருந்துள்ளனர். சென்ற 8 மாதங்களுக்கு முன்பே இவரது கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதன்பின் நதியா தனது தாய் வீட்டில், குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் குழந்தைகளை கவனிக்காமல், அடிக்கடி பலருடன் செல்போனில் பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

இதைக்கண்ட பாட்டியான நாகமணி குழந்தைகளை சரியாக கவனிக்காமல், யாருடன் போன் பேசுகிறாய் என கண்டித்து வீட்டை விட்டு அனுப்பியுள்ளார். ஆனால் இதைக்கண்டுகொள்ளாமல் நதியா பலருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நாகமணிக்கும், நதியாவிற்கும் குடிப்பழக்கம் இருந்ததால், இருவரும் குடித்துவிட்டு அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். ஒருநாள் தாயை, மகள் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த நாகமணி தனது அக்காவீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று வீடு திரும்பிய தாயும், மகளும் குடித்துவிட்டு மீண்டும் சண்டைபோட்டதாக கூறப்படுகிறது. மகளை கண்டித்துவிட்டு, இருவரும் படுத்து தூங்கியுள்ளனர். ஆனால் ஆத்திரம் அடங்காத நாகமணி தூங்கிக் கொண்டிருக்கும் மகளின் தலை மீது குளவிக்கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், சடலத்தை பிரதே பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி ஜெய்சிங் விசாரணை செய்ய, போலீசார் நாகமணியை கைது செய்தனர். இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

கடற்கரையில் துள்ளல் ஆட்டம், கிளாமர் போட்டோஷூட்: கலக்கும் 'பீஸ்ட்' நாயகி!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சமூகவலைதளங்களில் பிரபலமானவர் என்பதும் குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராமில் சுமார் 15 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளார்கள்

எனக்கு எந்த லட்சியமும் கிடையாது: விஜய்சேதுபதியின் பிரத்யேக பேட்டி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, பாலிவுட் என அனைத்து இந்திய மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார் என்பதும். அந்த பிசியிலும் அவர் 'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சியை சன் டிவிக்காக

தனுஷூக்கு பதிலாக சித்தார்த்தை தேர்வு செய்த பிரபல இயக்குனர்!

தனுஷ் நடித்த இரண்டு வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் மூன்றாவதாக தனுஷை வைத்து இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது சித்தார்த் படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

ஆபாசப்படம் காண்பித்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.....! பாஜக நிர்வாகி அதிரடி கைது....!

ஆபாசப்படத்தை காண்பித்து சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்வு செய்த, பாஜக நிர்வாகி மகாலிங்கத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

மகனாக விரல் பிடித்த அப்பா: நனவானது சிவகார்த்திகேயனின் 18 வருட கனவு!

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 18 வயது கனவு நனவானது என தனது மகனின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.