close
Choose your channels

மகனாக விரல் பிடித்த அப்பா: நனவானது சிவகார்த்திகேயனின் 18 வருட கனவு!

Monday, July 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 18 வயது கனவு நனவானது என தனது மகனின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று மகன் பிறந்துள்ளார். தனது மகன் தன்னுடைய கை விரலை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ’18 வருடம் கழித்து என் அப்பா என் விரலைப் பிடித்து இருக்கிறார்கள் மகனாக’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி அம்மாவும் குழந்தையும் நலம்’ என்று பதிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகள் உள்ளார் என்பதும், அவர் சிவகார்த்திகேயனுடன் ‘கனா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.