மும்பை டிராபிக்கில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய டேவிட் வார்னர்… வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,March 16 2023]

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் மும்பை போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் ஐபில் போட்டிகள் மூலமாக இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். மேலும் இவர் இந்திய சினிமா பாடல்களுக்கு அவ்வபோது நடனம் ஆடி ரசிகர்களைத் தன்பக்கம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியா- ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக மும்பை வந்திருக்கும் டேவிட் வார்னர் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் மும்பை சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபில் போட்டிகளில் தொடர்ந்து ஆர்வத்துடன் விளையாடிவரும் டேவிட் வார்னர் இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தலைமை தாங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதால் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள வில்லை. அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர் அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெற்றுள்ளது. இதேபோல ஆஸ்திரேலிய அணியும் ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ள நிலையில் இரு அணிகளுக்குமான போட்டி வரும் ஜுன் 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் இந்தியா- ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19, 22 ஆம் தேதிகளில் முறையே மும்பை, விசாகபட்டிணம், சென்னையில் நடைபெறவுள்ளன. இதற்காக இந்தியா டேவிட் வார்னர் இந்தியா வந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார். இதற்கு மத்தியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக கலந்துகொள்ளவில்லை. இதனால் வலிமையான ஆஸ்திரேலிய அணியை இந்தியா வெற்றிக்கொள்ளுமா என ரசிகர்கள் ஆர்வத்தை வெளியிட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் மும்பை போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் ஐபில் போட்டிகள் மூலமாக இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். மேலும் இவர் இந்திய சினிமா பாடல்களுக்கு அவ்வபோது நடனம் ஆடி ரசிகர்களைத் தன்பக்கம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியா- ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக மும்பை வந்திருக்கும் டேவிட் வார்னர் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் மும்பை சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபில் போட்டிகளில் தொடர்ந்து ஆர்வத்துடன் விளையாடிவரும் டேவிட் வார்னர் இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தலைமை தாங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதால் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள வில்லை. அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர் அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெற்றுள்ளது. இதேபோல ஆஸ்திரேலிய அணியும் ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ள நிலையில் இரு அணிகளுக்குமான போட்டி வரும் ஜுன் 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் இந்தியா- ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19, 22 ஆம் தேதிகளில் முறையே மும்பை, விசாகபட்டிணம், சென்னையில் நடைபெறவுள்ளன. இதற்காக இந்தியா டேவிட் வார்னர் இந்தியா வந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார். இதற்கு மத்தியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக கலந்துகொள்ளவில்லை. இதனால் வலிமையான ஆஸ்திரேலிய அணியை இந்தியா வெற்றிக்கொள்ளுமா என ரசிகர்கள் ஆர்வத்தை வெளியிட்டு வருகின்றனர்.

More News

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த சிம்ரன்.. 50வது படம் என அறிவிப்பு..!

பிரபல இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படம் தமிழில் அவருடைய ஐம்பதாவது படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

லோகேஷின் LCU பாணியில் PCU.. பிரபல நடிகர் படத்தின் மாஸ் தகவல்..!

ஒரு இயக்குனரின் முந்திய படத்தின் கேரக்டரை அடுத்த படத்தில் புத்திசாலித்தனமாக இணைப்பதை சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று கூறுவது உண்டு. ஹாலிவுட்டில் இது சர்வ சாதாரணமாக

காயம்பட்ட மனசு ஒருத்தனை எந்த எல்லைக்கும் கொண்டு போகும்: வெங்கட்பிரபுவின்  'கஸ்டடி' டீசர்..!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகா சைதன்யா நடிப்பில் உருவாகி இருக்கும் 'கஸ்டடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

பக்கா கமர்ஷியல் பேக்கேஜ்; 'பத்து தல' படத்தின் முதல் விமர்சனம் தந்த பிரபல தயாரிப்பாளர்..!

 சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் பக்கா கமர்சியல் பேக்கேஜ் என்று தெரிவித்துள்ளதை அடுத்து முதல் விமர்சனமே பாசிட்டிவ் விமர்சனமாக வந்துள்ளதாக கருதப்படுகிறது. 

ரூ.1500 கோடிக்காகத்தான் திருமணம்.. நரேஷ்பாபுவின் 4வது மனைவி குறித்து முதல் கணவர் திடுக் தகவல்..!

 பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரர் நரேஷ் பாபு 60 வயதில் நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை நான்காவது திருமணம் செய்து கொண்ட நிலையில் பவித்ரா லோகேஷின் முதல் கணவர்  திடுக் தகவல்