close
Choose your channels

ரூ.1500 கோடிக்காகத்தான் திருமணம்.. நரேஷ்பாபுவின் 4வது மனைவி குறித்து முதல் கணவர் திடுக் தகவல்..!

Thursday, March 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரர் நரேஷ் பாபு 60 வயதில் நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை நான்காவது திருமணம் செய்து கொண்ட நிலையில் பவித்ரா லோகேஷின் முதல் கணவர் திடுக் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நரேஷ் பாபு - பவித்ரா லோகேஷ் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இருவரும் துபாய்க்கு தேனிவு சென்றார்கள் என்பதும் அது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பவித்ரா லோகேஷின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் என்பவர் கூறிய போது ’தனது மனைவி பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்பினார் என்றும் அவர் ஆடம்பர வாழ்க்கைக்காக எதையும் செய்பவர் என்று தெரிவித்தார். மேலும் அவர் ஒரு சந்தர்ப்பவாதி என்றும் நரேஷின் 1500 கோடி ரூபாய் சொத்தை அபகரிப்பதற்காக தான் அவரை திருமணம் செய்து கொள்வது போன்ற ஒரு நாடகத்தை நடத்தி உள்ளார் என்றும் நரேஷுக்கு இப்போது இது புரியவில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் நான் சொன்னதை புரிந்து கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

பணத்திற்காகத்தான் தன்னை விவாகரத்து செய்துவிட்டு நரேஷ் பாபுவை பவித்ரா லோகேஷ் திருமணம் செய்து கொண்டார் என்று அவரது முதல் கணவர் சுசேந்திர பிரசாத் கூறிய திடுக் தகவலால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.